Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொகுப்பாளர் மாகாபா மீது வழக்குப்பதிவு! அந்த நிகழ்ச்சியால் வந்த பிரச்சனை.. சிக்கும் 50 பேர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் மாகாபா உட்பட 50 பேர் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் முறையாக அனுமதி வாங்காத காரணத்திற்காக புகார் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருக்கும் மாகாபா திருச்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாக கூறப்படுகிறது. அதற்கு முறையான அனுமதி வாங்காமல் ரோட்டில் பிரம்மாண்டமாக செட் போட்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

television vijay tv makapa

இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கும் போது உடற்பயிற்சிக்கு விழிப்புணர்வு செய்ய போகிறோம் என்று அனுமதி வாங்கிவிட்டு ஸ்ட்ரீட் டே கொண்டாடப்பட்டதாகவும் கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டதால் பலர் ஏமாந்து திரும்பி போனதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் மாகாபாவும் ஒருவர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் டிவியில் தொகுப்பாளர் மாகாபாவிற்கு இது போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த வாரத்தில் தான் மணிமேகலை மற்றும் பிரியங்கா பிரச்சினைக்கு இடையே ஒரே ஒரு போஸ்ட் போட்டு இணையத்தில் அதிகமாக வாங்கி கட்டிக் கொண்டார்.

மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை பற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்கும் போது காட்டுக்குள் ரெண்டு யானைகள் அடித்து கொண்டு இருந்தால் நாம் அந்த பக்கமாக போய் அந்த சண்டையை விலக்கிவிடக்கூடாது, விலகி போய்விட வேண்டும் என்று பஞ்ச் டயலாக் பேசி இருந்தார்.

television vijay tv makapa

ஆனால் சில தினங்களில் மணிமேகலை தன்னுடைய வீடியோவில் பிரியங்காவிற்கு சப்போர்ட் செய்பவர்களை சொம்பு என்று பேசி இருந்தார், அதற்கு சொம்பு என்று சொன்னால் நாங்கள் செருப்பை காட்டுவோம் என்று மாகாபா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருந்தார். இது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற நிகழ்ச்சியை மாகாபா தான் தொகுத்து வழங்கி இருந்தார். அப்போது கூட மாகாப்பா நான் சமீபத்தில் செருப்பாலும் அடி வாங்கியாச்சு செருப்ப வச்சு போஸ்ட் போட்டும் அடி வாங்கியாச்சு என்று கிண்டலாக சொல்லி இருந்தார். இந்த நிலையில் இப்போது இவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருப்பதும் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+