Chadralekha Serial: தொட்டில் ஆடலேன்னா குழந்தை பிறக்காதா?
சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் குழந்தை இல்லாத குறையை பெரிது படுத்தாமல் கதையோடு ஒட்டி கொண்டு போவது பாராட்டும் வகையில்தான் இருக்கிறது.
குழந்தை பிறக்க கால தாமதம் ஆகும் சிலர் இந்த சீரியலில் வரும் மாமியார், மாமனார், கணவர் போன்று அவர்கள் வீட்டிலும் இருந்தால் உண்மையில் சீரியலுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லலாம்.
சந்திராவுக்கு கருப்பை வீங்கி இருக்கிறது என்று குழந்தை பிறக்கவில்லை. இதற்கு வைத்தியம் பார்த்தால் நிச்சயம் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் கூறுகிறார்.
இப்போ ரெடி
மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு ,தாயாகும் தகுதியை சந்திரா பெற்று விட்டதாக டாக்டர் சொல்றாங்க. இருந்தாலும் தொட்டில் காத்த அம்மன் கோயிலுக்கு போயி தொட்டில் கட்டி விரதம் இருந்தால் குழந்தை வரம் கிடைக்கும் என்று குடும்பமே கோயிலுக்கு போகிறார்கள். அங்கு சுவாமிஜி சொன்ன அனைத்து பூஜைகளையும் செய்து வருகிறார்கள்.
Tamil Selvi Serial: சீரியல்களில் இந்த பூக்காரங்க தொல்லை தாங்க முடியலையே!
தொட்டில் ஆடணும்
தொட்டில் கட்டிவிட்டு வாங்க. அந்த தொட்டில் ஆட்டினால் ,நீங்கள் நான் சொல்லும் கடுமையான விரதத்தை மேற்கொள்ளலாம். தொட்டில் ஆடவில்லை என்றால் ,நீங்கள் விரதம் இருப்பதே வேஸ்ட். உங்களுக்கு குழந்தையே பிறக்காது. என்னை நீங்கள் பார்க்க வரவேண்டாம்.விரதமும் இருக்க வேண்டாம் என்று சொல்கிறார்.
தொட்டில் தாயே
மரத்தில் கட்டி இருக்கும் அத்தனை தொட்டிலும் ஆடும்போது நமது தொட்டில் மட்டும் எப்படி ஆடாமல் இருக்கும் என்று யோசனை வந்தாலும், பார்ப்பவர்களுக்கே சென்டிமென்ட் பயம் வருகிறது. அப்படித்தான் சந்திராவும் தொட்டிலை கட்டி சில நிமிடங்கள் வரை ஆடாமலிருக்கிறது. பக்கத்து பக்கத்து தொட்டில்கள் வேகமாக காற்றில் ஆடும்போது இந்த தொட்டிலுக்கு மட்டும் காற்று வீசாதது எதனால்?
தொட்டில் ஆடுது
கண்களை மூடி எல்லாரும் கண்ணீருடன் தொட்டில் ஆடணும் ஆடணும் என்று வேண்டிக்க , தொட்டில் திடீர்னு வேகமா ஆடுது. உடனே எல்லாரும் சந்தோஷமா ஆனந்த கண்ணீர் விடறாங்க .இப்போது அடுத்து கடுமையான விரதம் இருக்கணுமாம். கஷ்டப்பட்டுத்தான் அந்த விரதம் இருக்கணும்னு சுவாமிஜி சொல்றார்.