சந்திரலேகா.. நிலா சீரியல் சங்கமம்... ஸ்வேதா சஞ்சய் வலையில்!
சென்னை: சன் டிவியின் மதிய நேர சீரியல்களில் சந்திரலேகா சீரியலும், நிலா சீரியலும் சங்கமமாகி இருக்கு.
சந்திரலேகா சீரியலின் சந்திரா கார் மக்கர் செய்ய, நிலா சீரியலின் நீலாம்பரியின் மகன் சஞ்சய் காரில் லிஃப்ட் கேட்கறா சந்திரா.
காரில் ஏற்கனவே நிலாவின் தங்கை ஸ்வேதா மயக்கத்தில் இருக்கா. சஞ்சய் அவளுக்கு மயக்க மருந்தை கொடுத்து அவளை அடைய நினைக்கறான்.
சஞ்சயும் ஸ்வேதாவும்
எங்க கெஸ்ட் ஹவுஸ் இதுதாங்க.. நாங்க உள்ளே போறோம்.. நீங்க கிளம்புங்கன்னு சொல்றான் சஞ்சய். இல்லை இந்த பொண்ணு என்னவோ மயக்கமா இருக்காளேன்னு சந்திரா இழுக்கறா.
அம்மாவை காப்பாத்த போன பவுர்ணமி இப்போ சிக்கலில்.. அப்பா காப்பத்துவாரா?
நான் பார்த்துக்கறேன்
நீங்க கிளம்புங்க நான் டாக்டரை வர சொல்லி பார்த்துக்கறேன்னு சொல்றான் சஞ்சய். அந்த நேரம் பார்த்து ஸ்வேதா போனுக்கு நிலா கால் பண்றா. ஸ்வேதா மயக்கத்தில் இருக்க, போனை கீழே போட்டுடறா.
நிலாவுடன் போனில்
சந்திரா அந்த போனை எடுத்து பேசறா... ஸ்வேதா நான் நிலா பேசறேன்னு சொல்றா. நான் ஸ்வேதா இல்லைங்க.. ஸ்வேதா ஒரு ஆபத்தில் மாட்டிகிட்டு இருக்காங்கன்னு சொல்றா.
ஸ்பாட்டில் நிலா
உடனே நிலா சந்திரா சொன்ன ஸ்பாட்டுக்கு வந்து பார்த்தால், சஞ்சய் அவளை அடைய நினைக்கறான். ஸ்வேதாவை மயக்கத்தில் இருந்து தெளிய வச்சு கூப்பிட்டா. . நீ யாருடி என்னை கேட்க... சஞ்சய்க்கு என் மேல எல்லா உரிமையும் இருக்குன்னு சொல்றா.
பொண்ணுங்களை
ஏண்டா அவ உன் மேலே எவ்வளவு காதல் வச்சிருக்கா பாரு. மயக்கத்துல கூட உன் பேரை சொல்றா. இப்படித்தான் நம்பி வந்த பொண்ணுங்களை ஏமாத்தறதான்னு கேட்டு நிலா சஞ்சயை அடிக்கறா. இப்படி நிலா, சந்திரலேகா சீரியல் சங்கமம் அகி இருக்கு.