என் மனைவி திவ்யாவை நான் தாக்கவில்லை.. வழக்கை ரத்து செய்ய கோரிய நடிகர் அர்ணவ்வின் மனு தள்ளுபடி!
சென்னை: சின்னத்திரை நடிகை திவ்யாவை தாக்கி கொடுமைப்படுத்தியதாக நடிகர் அர்ணவ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சின்னத்திரை நடிகர் அர்ணவ், தன்னை சித்ரவதை செய்வதாக கூறி, நடிகை திவ்யா அளித்த புகாரின் அடிப்படையில், அர்ணவ் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ணவ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார்.

திவ்யாவை தாக்கியதாகக் கூறிவது தவறு என்றும், அவர் தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ், அர்ணவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார்.
இதையடுத்து, அர்ணவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறிய நீதிபதி, அர்ணவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சின்னத்திரையில் கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகி மகராசி எனும் சீரியலில் நடித்து வருபவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் தற்போது செவ்வந்தி சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் செல்லமே சீரியலில் நடித்து வரும் அர்ணவ் எனும் நைனா முகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை அவர் வயிற்றில் இருக்கும் கரு கலையும் அளவுக்கு எட்டி உதைத்ததாக திவ்யா புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீஸார் அர்ணவ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் திவ்யாவுக்கு வளைகாப்பு நடந்து அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அர்ணவ் கூறுகையில் என் குழந்தையை தூக்க முடியவில்லை. இதற்கு மேல் திவ்யாவுடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை. ஆனால் குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
என் குழந்தையை பார்க்க நேரில் நான் செல்ல முடியாது. சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. எனவே அந்த பெண் குழந்தையை எனக்கு வீடியோ காலில் காட்டினால் கூட போதும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார் அர்ணவ். ரசிகர்களும் உங்களுக்கு குட்டி தேவதை பிறந்திருக்கிறது, ஈகோவை தூக்கி போட்டுவிட்டு உங்கள் குழந்தையை போய் பாருங்கள் என அறிவுறுத்தி வருகிறார்கள். பிரசவத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு தனக்கு உதவி செய்ய கூட யாருமில்லை என திவ்யா ஸ்ரீதர் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications