Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகை நிதி அகர்வாலிடம் கூட்டத்தில் அத்துமீறிய நபர்கள்! கழுதை புலியோட மோசமான மிருகம்.. சின்மயி ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று டிசம்பர் 17ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த "தி ராஜாசாப்" திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை நிதி அகர்வாலிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் தவறாக நடந்து இருக்கிறார்கள். ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்த ஆபாச செய்கைகளை பாடகி சின்மயி கடுமையாக கண்டித்திருக்கிறார்.

நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் ராஜாசாப் படத்திலிருந்து "சஹானா சஹானா" பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் தனியார் மாலில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை நிதி அகர்வாலும் கலந்து கொண்டிருந்தார். விழா நடந்து கொண்டிருந்த போதே அங்கு கூட்டம் அலைமோத தொடங்கிவிட்டது.

Chinmayi Nidhhi Agerwal

ஆனாலும் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அங்கிருந்து வெளியே வந்த நிதி அகர்வால் தன்னுடைய காரை நோக்கி சென்று இருக்கிறார். அப்போது மொத்த ரசிகர்கள் கூட்டமும் சேர்ந்து நிதி அகர்வாலை நகரக்கூட முடியாத அளவிற்கு சுற்றி வளைத்துவிட்டனர். அதோடு சிலர் நிதி அகர்வால் அத்துமீறி தொட்டு இழுத்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றனர்.

சிலர் நிதி அகர்வால் உடையை பிடித்து இழுத்து இருக்கின்றனர் இதனால் நிதி அகர்வால் சங்கடத்திற்கு உள்ளானார். இந்த இடத்தை விட்டு எப்படியாவது தப்பித்தால் போதும் என்று பயத்தோடும் பதட்டத்தோடும் இருந்தார். பிறகு அங்கு வந்த சில பாதுகாவலர்கள் நிதி அகர்வாலை ரசிகர்களிடமிருந்து மீட்டு காரில் ஏற்றி வைத்தனர். காருக்குள் வந்த பிறகும் கூட நிதி அகர்வால் சில நிமிடங்கள் தனக்கு நடந்த பதட்டமான சூழ்நிலையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. நடிகை என்றால் இவ்வளவு மோசமாக செயல்களில் ஈடுபடலாமா? என்று பலர் குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் தான் நடிகர் விஜய் நடத்திய கரூர் கூட்டத்தில் அதிகமான ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட விபத்தில் 41 பேர் இறந்தனர்.

இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத சூழ்நிலையில் ஒரு நடிகை வருகிறார் என்றதும் இப்படி கூட்டம் கூடி, அதுவும் அந்த நடிகையிடமே அத்துமீறி இருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அதோடு சிலர் ரசிகர்கள் என்கிற போர்வையில் சிலர் செய்யும் அட்டூழியங்களை பார்க்கும் போதே பயம் ஏற்படுவதாகவும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் பாடகி சின்மயி தன்னுடைய எக்ஸ் தளத்தில் இதை கடுமையாக கண்டித்து ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் கழுதைப் புலிகளை விட மோசமாக நடந்து கொள்ளும் ஒரு கும்பல் ஆண்கள். உண்மையில் கழுதைபுலிகளை சொல்லி ஏன் அவமானப்படுத்த வேண்டும்? ஒரே மனப்பான்மை கொண்ட ஆண்களை ஒரே கும்பலாக சேர்த்தால் அவர்கள் ஒரு பெண்ணை இப்படித்தான் துன்புறுத்துவார்கள்.

ஏதாவது ஒரு கடவுள் இவர்களை எல்லாம் அழைத்து சென்று வேறு ஒரு கிரகத்தில் ஏன் விடக்கூடாது என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவிலும் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+