லைஃப்ல நான் எடுத்த தப்பான முடிவு? துரோகம் ரொம்ப கொடுமையானது! டி இமான் உருக்கம்
சென்னை: இசையமைப்பாளர் டி இமான் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய வாழ்க்கையில் தான் எடுத்த தப்பான முடிவு பற்றியும், வாழ்க்கையில் துரோகம் எவ்வளவு கொடுமையானது என்பது பற்றியும் பேசி இருக்கிறார்.
இசையமைப்பாளர் டி இமான் பல ஹிட் பாடல்களுக்கு இசையமைத்து பலரின் சோகங்களை மறக்க செய்திருக்கிறார். அவருடைய பாடல்களை கேட்கும் போது ஒரு விதமான புத்துணர்வு பலருக்கும் ஏற்படும். அதே நேரத்தில் சமூக ஆர்வலராகவும் சேவைகள் செய்து கொண்டிருக்கிறார். தன்னால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளின் போது இமான் உடல் உறுப்பு தானம் செய்தது பெரிய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகள் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது இமான் பேசியது பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதில் இமானிடம் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் தவறான முடிவு எப்போதாவது எடுத்து விட்டோம் என்று பீல் பண்ணி இருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு இமான் பதில் கூறியிருக்கிறார்.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் அப்படி தவறான முடிவு என்னுடைய வாழ்க்கையில் இதுவரைக்கும் எடுத்ததே கிடையாது. எந்த விஷயமாக இருந்தாலும் நான் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தான் முடிவு எடுப்பேன். அதனால் நான் எடுத்த முடிவு தவறாகிவிட்டது என்று நான் பீல் பண்ணியது இல்லை என்று கூறி இருக்கிறார்.
அதை தொடர்ந்து துரோகம் பற்றிய கேள்விக்கு, துரோகம் ரொம்பவும் கொடுமையானது. ஒரு இடத்தில் நீங்கள் ஒரு பாடத்தை கற்று கொண்டால்... நாம சந்திக்கிற எல்லாரிடமும் அதே மனநிலையில் பார்ப்போம் ஆனால் அப்படி இருக்கவே செய்யாது. ஏன்னா நாம சந்திக்கிறவங்க ஏற்கனவே வேற பிரச்சனையில் இருப்பாங்க. அவங்க கிட்ட நாம பேசும்போது தான் அவங்க வேற பிரச்சினையில் இருப்பதே நமக்கு தெரியும்.
அதனால் நாம் ஒரு இடத்தில் துரோகம் அடைந்து விட்டோம் என்றால் அடுத்தவர்களை பார்க்கும்போது இப்படித்தான் இருப்பார்கள் என்று நாமாக யாரையும் யூகிக்க முடியாது என்று கூறி இருக்கிறார். அதைத்தொடர்ந்து வாழ்க்கையில் பெய்லியரை எப்படி கடப்பது என்ற கேள்விக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதற்கு பெய்லியர் எல்லோருடைய வாழ்க்கையில் இருக்கும். அதை நாம் இன்னைக்கோ நேற்றைக்கோ நடந்த ஒரு விஷயமாக எடுத்துக் கொண்டு கடந்து போய்விட வேண்டும். அதையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கொண்டு நாளைக்கு நாம எப்படி வெற்றியாக மாற்றலாம் என்று மனநிலைக்கு வந்து விட வேண்டும்.
பொதுவா இந்த தோல்விகள் எல்லாமே ஒரு ஹோப் தான். காரணம் ஹோப் என்றால் ஒரு மனிதனின் வாழ்க்கை இன்னைக்கு எப்படி வேணாலும் இருக்கலாம் நாளைக்கு கண்டிப்பா மாறும் என்ற நம்பிக்கையோடு தான் ஒவ்வொரு மனிதனும் தூங்குறான், முழிக்கிறான். அதனால் தோல்விகள் கூட ஒரு நம்பிக்கைதான் என்று இமான் விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications