தலையில் தட்டிய செப்..கத்தி ஆர்ப்பாட்டம் செய்த ஜி.பி முத்து.. குக் வித் கோமாளி செட்டில் நடந்த களேபரம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் காந்தாரா திரைப்படத்தில் வருவது போல ஜிபி முத்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்.
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 4 பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து 26 ஆம் தேதி வரைக்கும் ஆன மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் ஜிபி முத்து தலையில் செப் அடித்திருக்கிறார்.
ஜி பி முத்து காந்தாரா திரைப்படத்தில் வருவது போன்று ஓவென்று அலறிக் கொண்டிருக்கிறார்.

நான்காவது சீசன் தொடக்கம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதனால்யே தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் அடுத்ததாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி விடுகிறது. அந்த வகையில் தற்போது நான்காவது சீசன் பிரம்மாண்டமாக பல புது கோமாளிகளோடு தொடங்கப்பட்டிருக்கிறது.

புதிய குக்கள்
ஏற்கனவே பழைய கோமாளிகளாக இருந்தால் புகழ், சுனிதா, குரோஸி, மணிமேகலை ஆகியோர் உடன் ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் கதாநாயகி ரவீனா, ஓட்டேரி சிவா, மோனிஷா, சில்மிஷம் சிவா போன்ற பலரும் புதிய கோமாளிகளாக அறிமுகமாகி இருக்கின்றனர். ஏற்கனவே இதுவரைக்கும் இருந்த சிவாங்கி முதல் முறையாக இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார். இந்த நிலையில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கலக்கப்போவது யாரு பாலா இடம்பெறவில்லை.

இந்த வாரம் சேலஞ்ச்
இந்த நிலையில் சீசன் தொடங்கி ஒரு சில வாரங்கள் முடிவடைந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக வந்திருக்க அவரோடு ஆட்டம் பாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்த போட்டியாளர்களுக்கு பிறகு இந்த வாரம் குச்சி சிப்ஸ் சேலஞ்ச் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை பார்த்து போட்டியாளர்களும் குக்களும் கொண்டாடி சந்தோஷத்தில் துள்ளுகின்றனர். பிறகு அனைவரும் தனித்தனியாக தங்களுடைய வேலையை தொடங்குகின்றனர்.

கத்தும் ஜி பி முத்து
அதில் எப்போதும் போல வேலை செய்து கொண்டிருக்கும் போட்டியாளர்களை தொந்தரவு செய்து கொண்டிருக்கும் செப்புகள் அங்கே எங்கே என அழைந்தபடியே இருக்க, அப்போது புகலிடம் செப் வெங்கடேஷ் பட் ஓ என்று கூற அதற்கு புகழ் ஓ என்று கத்த அதைத் தொடர்ந்து ஜி பி முத்துவும் ஓ என்று காந்தாரா திரைப்படத்தில் சாமி வந்து கத்துவது போன்று ஜி பி முத்துவும் கத்திக் கொண்டிருக்கிறார் அப்போது அருகில் இருந்த செப்பு தாமு தலையிலே தட்டி ஏன் இப்படி கத்துகிற என்று கேட்க, ஜி பி முத்து அதிர்ச்சி அடைகிறார் இந்த புரோமோ தற்போது அதிகமாக ரசிகர்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications