Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சோசியல் மீடியாவில் வாட்டர் மெலன் ஸ்டார் என்று பிரபலமான திவாகர், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டிருக்கிறார். அந்த சூட்டிங்கில் புகழ், கானா வினோத் மற்றும் மாகாபா தன்னை அடித்து கொலை மிரட்டல் விடுப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

Cook With Comali vijay tv Divakar Pugazh

சோசியல் மீடியா பிரபலம்

பிசியோதெரபி டாக்டரான திவாகர் சோசியல் மீடியாவில் நடிகர் சூர்யாவை போலவே தர்பூசணி சாப்பிட்டு ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமானார். அதற்கு பிறகு தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்று பட்டம் கொடுத்துக்கொண்டார். இவருக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸுக்குள் சண்டை

இந்த நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் நாளிலிருந்து தற்பெருமை பேசியே பெரிதாக பிரபலமானார். ஒரு சில நேரங்களில் அவர் பேசுவது ஐயோ பாவம் என்று சொல்வது போல இருந்தாலும், சில நேரங்களில் அவர் பேசுவது கடுப்பு ஏற்றுவதாகவே பலருக்கும் இருக்கும். ஆனாலும் அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதே கிடையாது. நான்தான் நடிப்பு அரக்கன் என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார். அதனாலேயே உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது.

அதுவும் கானா வினோத்துக்கும் இவருக்கும் சொல்லவே வேண்டாம் இருவருக்கும் வாய்க்கால் வரப்பு சண்டை போடத்தான் எப்போதும் முட்டிக்கொண்டு இருந்தது. ஆரம்பத்தில் அந்த சண்டையில் ரசிக்கும்படியாக இருந்தது. அப்போது ஒரு முறை விஜய் சேதுபதி உங்க ரெண்டு பேருடைய சண்டை க்யூட்டா இருக்கு மக்கள் ரொம்ப ரசிக்கிறாங்க என்று சொன்னதிலிருந்து வாட்டர் மெலன் ஸ்டாரின் ஆக்டிவிட்டியே மாறி போனது.

அதற்கு பிறகு கானா வினோத் தன்னிடம் வந்தாலே எனக்கு இருக்கிற பிரபலத்தை வைத்து இவரும் பிரபலம் அடைவதற்காக என்னிடம் வருகிறார் என்று பல இடங்களில் பேசி இருக்கிறார். இதனால் இவர்கள் இருவருக்குள் சண்டை தான் வந்தது. அதனாலயே அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கானா வினோத் தன்னுடைய மனைவியுடன் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

சூட்டிங் ஸ்பாட்டில் சண்டை

அதே நிகழ்ச்சிக்கு கோமாளியாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் கலந்து கொண்டிருந்தார். அதற்கான சூட்டிங் நேற்று நடைபெற்றிருக்கிறது. காலையில் சூட்டிங் முடிந்ததும் இடைவேளை நேரத்தில் புகழும் கானா வினோத்தும் என்னிடம் வந்து தரக்குறைவாக பேசினார்கள், என்னை பற்றி மட்டுமல்லாமல் என்னுடைய குடும்பத்தை பற்றியும் பேசினார்கள், நான் நடிப்பு அரக்கன் என்று அந்த நிகழ்ச்சியில் பேசினேன் அதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்காக என்னிடம் சண்டைக்கு வந்தார்கள்.

அப்போது மது போதையில் இருந்த மாகாபா என்ன நடந்தது என்று கேட்காமல் இரும்பு கம்பியை வைத்து அடித்து விட்டார் என்று நேற்று போலீசில் கம்பளைண்ட் கொடுத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் கானா வினோத் மற்றும் புகழை கூப்பிட்டு விசாரித்ததாகவும் ஆனால் மாகாபா அங்கே வரவே இல்லை. ஸ்டேஷனுக்கு வந்த புகழும் கானா வினோத்தும் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

கமிஷனர் ஆபீஸில் புகார்

கானா வினோத்துக்கு ஏற்கனவே ரவுடிங்க நிறைய பேரு தெரியும், அதனால உன்னால இனி சென்னையில் வந்து ஷூட்டிங் வர முடியாது என்று கொலை மிரட்டல் விடுப்பதாக கமிஷனர் அலுவலகத்தில் திவாகர் புகார் கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+