ஜெயலலிதா இந்த படத்துக்கா முதன்முதலா ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கினார்?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர் தேவிஸ்ரீக்கு கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?
செல்வி ஜெ.ஜெயலலிதா முதன்முதலாக எந்த படத்துக்கு ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கினார் என்பதுதான்.
பங்கேற்பாளருக்கு நான்கு ஆப்ஷன்கள் வழங்கினார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ராதிகா சரத்குமார்.
அடிமைப் பெண்
ஆயிரத்தில் ஒருவன், அடிமைப் பெண், காவல்காரன், பட்டிக்காடா பட்டினமா என்கிற நான்கு ஆப்ஷன்களை வழங்கி எந்த படத்துக்கு ஜெயலலிதா முதன்முதலாக ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கினார் என்று கேட்டார். பங்கேற்பாளர் அடிமைப்பெண் என்று சொல்லிவிட்டு சந்தேகமா இருக்கு மேம் என்று கூறினார்.
Lakshmi stores serial: அது சரி குஷ்பூ மேம்.. அவருக்கு பதில் இவர்னு போட்டு இருக்க கூடாதா?
டிக் டிக் டீச்சர்
தேவிஸ்ரீ இப்போ நம்ம கூட டிக் டிக் டீச்சர் இல்லை. அதனால் நீங்க யோசிச்சு நிதானமா பதில் சொல்லலாம் என்று சொன்னார் ராதிகா. ஆனால், இரண்டு லைஃப் லைன் ஆப்ஷன் இருக்குன்னு சொன்னார். தேவிஸ்ரீ யோசித்துக் கொண்டே இருந்தார். என்ன யோசனை என்று கேட்டபோது கொஞ்சம் டவுட் இருக்கு என்று சொன்னார்.
எம்ஜிஆர் ரசிகர்
அப்பா எம்ஜிஆர் ரசிகர் மேம்.. அதனால் இந்த படங்கள் எல்லாம் பார்த்து இருக்கேன். அடிமைப் பெண்தான்னு நினைக்கறேன். ஆனால் டவுட் இருக்குன்னு சொன்னார். சரி லைஃப் லைன் போகலாம் என்று போனால். அப்போதும் சந்தேகத்தில் இருந்தார் தேவிஸ்ரீ.
இந்த கேள்வியை
இந்த கேள்வியைத் தவிர்க்கிறேன் என்று சொல்லி பின்னர் என்ன பதில் சொல்லி இருப்பீர்கள் என்று கேட்டபோது, தந்தையும் மகளும் அடிமைப் பெண் என்றுதான் சொன்னார்கள். ஆனால், உண்மையில், செல்வி ஜெ. ஜெயலலிதா முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கின படம் பட்டிக்காடா பட்டினமாதானாம்.