மிஷ்கின் ராத்திரி 12 மணிக்கு.. பாலுமகேந்திரா ஜூனியர்ஸ் டைரக்டர் பாலா உட்பட இப்படித்தான்: பிரபலம் நச்
சென்னை: பாலுமகேந்திரா உதவியாளர்கள் எல்லாருமே தங்களை பிரம்மாவாக நினைத்து கொள்வார்கள்... இதுபோன்றவர்கள் முகம், பாலாவை முகத்தை போல கொடூரமான முகம்" என்று தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
BBT யுடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் டைரக்டர் பாலா பற்றி பேசும்போது, "பாலா ஒருவிதமான சைக்கோ மனநிலைமை உடையவர்.. பாலாவும், விக்ரமும் மிக நெருங்கிய குடும்ப நண்பர்கள்.. விக்ரமன் தன்னுடைய மகனை வைத்து படம் எடுக்க பாலாவிடம் சொல்கிறார்.. ரூபாய் 5 கோடியும் கொடுக்கிறார்.. அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தருகிறது.

பாலா படம்: இதனால் கோபமடைந்த விக்ரமன், "நீ என்னை ஏமாற்றிவிட்டாய்" என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். அப்போதிருந்து 2 பேரும் பேசவில்லை. ஃபர்ஸ்ட் காப்பியை, ஒன்றரை கோடி ரூபாயில் முடித்துவிட்டு, மிச்சம் மூன்றரை கோடி ரூபாயை செலவு செய்யவில்லை என்பதுதான் விக்ரமின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு இன்றுவரை பாலா பதில் சொல்லவில்லை.
பரதேசி படத்தில் தன்னுடைய வயதுக்கு மூத்தவர்களை எல்லாம் திட்டறார், அடிக்கிறார் பாலா. இதை அங்கிருந்த இணை இயக்குனர்கள் செல்போனில் வீடியோ எடுத்துவிட்டார்கள். இந்த படம் தேசிய விருதுக்கு செல்கிறது. அப்போது, நடுவரிடம் அந்த வீடியோவும் போகிறது. வயது மூத்தவர்களை பாலா தாக்குவதை, அந்த நடுவர் பார்க்கிறார். இந்த வீடியோவின் உண்மைத்தன்மையையும் ஆராய்க்கிறார். அப்போதுதான், செட்டில் பாலா எப்போதும் இப்படி நடந்து கொள்வது தெரியவந்தது.
உதவி இயக்குனர்கள்: ஒருநாள் உதவி இயக்குனர்கள் பகலில் சாப்பிட முடியாமல், இரவு 12 மணிக்குதான் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். இதையறிந்த பாலா, சாப்பிடும் இடத்துக்கு சென்று, அங்கு எல்லாரையும் அடிக்கிறார், மிதிக்கிறார்.. சாப்பாட்டை தூக்கி எறிகிறார்.. ஏனென்றால், இவர் இன்னும் சாப்பிடலயாம். டைரக்டர் சாப்பிடாமல், உதவி இயக்குனர்கள் சாப்பிடுகிறார்களே? என்ற கோபத்தை அங்கு காட்டுகிறார்.
சேது படம் எடுப்பதற்கு முன்பு, பாலுமகேந்திராவிடம் வேலையாளாக இருந்தவர்தான் பாலா.. பாலுமகேந்திராவிடம் யாருமே ஜூனியர்களாக வேலை பார்க்க முடியாது. பாலு மகேந்திரா ஜூனியர்கள் எல்லாருமே மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள். சீமான், பாலா, உட்பட இவங்க யாருமே சராசரியாக இருக்க மாட்டாங்க.
பாட்டு சத்தம்: மிஷ்கின் ராத்திரி 12 மணிக்கு வாக்கிங் போவாராம். உதவி இயக்குனர்களும் கூடவே வாக்கிங் போகணுமாம். ராத்திரி 12 மணிக்கு மியூசிக் போடுவாராம் மிஷ்கின். அத்தனை பேரும் அதை ரசிக்கணுமாம். இதனால பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்கு வந்து பலமுறை போலீஸ் கேஸ் ஆயிருக்கு.. ஹிக்கிம் பாதம்ஸில் புக் விற்றவர்தான் மிஷ்கின்.
இவர்கள் எல்லாருமே தங்களை பிரம்மாவாக நினைத்து கொள்வார்கள்... பாரதிராஜாவால், திரைப்பட உலகத்தில் பல பெண்களை பாலியல் தீதியாக பயன்படுத்தி கொண்டு அனுப்ப விடுவாராம்.. என்னுடைய நண்பர் ஒருமுறை சொன்னார், 'பாதிக்கப்பட்ட நடிகைகள் ஒருநாள் அறைக்குள், பாரதிராஜாவை தாக்கினார்களாம்.. இதுபோன்றவர்கள் முகம், பாலாவை முகத்தை போல கொடூரமான முகம்" என்றெல்லாம் தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications