நான் போலீஸ் படங்களை எடுக்காத காரணம் இதுதான்! ஸ்டேஷனுக்குள் இருக்கும் நிலை மாறனும்! பா ரஞ்சித் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற படங்களில் ஒன்றாக இருந்தது காளிதாஸ். பரத் நடித்த இந்த படம் 2019-ம் ஆண்டு வெளியாகி வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'காளிதாஸ் 2' உருவாகி, மீண்டும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் தான் போலீஸ் படங்களை இயக்காதது குறித்து பேசி இருக்கிறார்.

காளிதாஸ் 2 நட்சத்திர பட்டாளம்
காளிதாஸ் இரண்டாம் பாகத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்தில் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பரத்துடன் சேர்ந்து அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ, அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக், 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும், 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த சங்கீதா இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழா
இந்த நிலையில் 'காளிதாஸ் 2' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் கலந்து கொண்டு பேசியது பெரும் கவனம் ஈர்த்தது.
பா.ரஞ்சித் அட்வைஸ்
புதுமுக இயக்குநர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பா.ரஞ்சித், மிகவும் நேர்மையான கருத்தை பகிர்ந்தார். "எப்போதுமே ஒரு ட்ரெண்டை நோக்கி போகக்கூடாது. இப்போ இளைஞர்களுக்கு லவ் படம் பிடிக்கும் என்பதால் நிறைய லவ் படங்கள் எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த எல்லா படமும் ஓடும் என சொல்ல முடியாது. நம்மிடம் இருக்கும் கதையை நம்பி, அது மக்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தைரியமாக எடுத்தால்தான் வெற்றி கிடைக்கும்," என்றார்.
அவர் தனது ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்து, "நானும் அப்படித்தான் சினிமாவுக்கு வந்தேன். அட்டக்கத்தி வெளியான போது வேறு ட்ரெண்ட் இருந்தது. ஆனாலும் அதில் சம்பந்தமே இல்லாத கதையுடன் வந்து வெற்றி பெற்றேன். அதனால் ஒரு இயக்குநர் தனது கிரியேட்டிவிட்டியை நம்பினால் போதும்," என்று கூறினார்.
போலீஸ் கதைகள் குறித்து நேரடி பதில்
'காளிதாஸ் 2' போலீஸ் பின்னணியில் அமைந்த படம் என்பதால், "நீங்கள் எப்போது போலீஸ் படம் எடுக்கப் போகிறீர்கள்?" என்ற கேள்வியும் பா.ரஞ்சித்திடம் எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் சொன்ன பதில் மிகவும் கவனம் ஈர்த்தது: "இதுவரை நான் போலீஸை மையமாக வைத்து எந்த கதையும் எழுதவில்லை. அப்படி ஒரு படம் எடுத்தால் அது சர்ச்சையாக மாறும். ஏனென்றால் நாங்கள் எப்போதும் பாதிக்கப்படும் மக்களின் பக்கம் தான் நிற்போம். அந்த பார்வையில் தான் கதை இருக்கும்."
"நல்ல போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சாதாரண மனிதன் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் சுதந்திரமாக பேச முடியுமா? அச்சமின்றி இருக்க முடியுமா? அந்த இடைவெளி இன்னும் குறையவில்லை. அது குறைந்தால் நல்ல மாற்றம் வரும்," என்றார்.
பா.ரஞ்சித் - தனித்துவமான இயக்குநர்
பா.ரஞ்சித் தமிழ் சினிமாவில் சமூக கருத்துகளை மையமாக வைத்து படங்கள் எடுக்கும் இயக்குநராக தனித்த அடையாளம் பெற்றவர். மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்கள் மூலம் சமூக அரசியல் கருத்துகளை வலுவாக பதிவு செய்தவர். அவரது பேச்சுகள் எப்போதும் சமூக உண்மைகளை சுட்டிக்காட்டும் வகையிலும் இருக்கும் என்பதால் ரசிகர்களிடம் தனி வரவேற்பு உண்டு.
காளிதாஸ் 2 மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
முதல் பாகம் கொடுத்த வெற்றியும், தற்போது வெளியாகியுள்ள அப்டேட்களும் 'காளிதாஸ் 2' மீது நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக பா.ரஞ்சித் பேசிய கருத்துகள் இந்தப் படத்தின் மீது கூடுதல் கவனத்தை திருப்பியுள்ளன.
மொத்தத்தில், ஒரு பக்கம் பரத்தின் கம்பேக் முயற்சி, மற்றொரு பக்கம் வித்தியாசமான கதை மற்றும் பிரபலங்களின் பங்கேற்பு ஆகியவை சேர்ந்து 'காளிதாஸ் 2' படத்தை எதிர்பார்க்கப்படும் பட்டியலில் முன்னிலைப்படுத்தி உள்ளது.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications