அப்படியே காத்தாட.. பார்ப்பவர்களை வியர்க்க வைத்த பாக்கியலட்சுமி "ஜெனி"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயிலின் வெட்கை ஒரு புறம் பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் போது பார்க்கும் பார்வையாலேயே சூடேற்றும் திவ்யா கணேஷ் மறுபுறம் புது தரிசனத்தைக் காட்டி இருக்கிறார்.

லாக்டவுன் நேரத்தில் சூட்டிங் இல்லாத காரணத்தினால் வீட்டிலேயே அடைந்து இருக்கும் நடிகைகள் தங்களுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றனர் .

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் மன அழுத்தத்தில் தவித்துக் கொண்டிருக்கும் போது அவர்களை குளிர்விப்பதற்காக நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு போட்டோசூட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

கவர்ச்சிப் பழம்

கவர்ச்சிப் பழம்

இதனை பார்த்து ரசிகர்களும் நன்றாக ரிலாக்சேஷன் ஆகி வருகின்றனர் .அதுவும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் திவ்யா கணேஷ் இதுவரைக்கும் இல்லாத வகையில் கவர்ச்சி பழமாக பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். இவரைப் பார்த்து பலர் இவர் சிங்கிளா அல்லது கமிட்டடா என தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

மிங்கிள் ஆகத் தயார்தான்

மிங்கிள் ஆகத் தயார்தான்

ஆனால் அவர் நான் சிங்கிளாக தான் இப்ப வரைக்கும் இருக்கிறேன். ஆனால் எப்ப வேணாலும் கமிட்டாகி விடுவேன் என கலக்கலாக கூறியிருக்கிறார் .அதுவும் தற்போது இவர் நேர்த்தி என்று சொல்வது நாம் ஒரு ஆடையை அணிவதால் மட்டுமே வரையறுக்கப்படவில்லை .நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.

தீ பிடிச்சுக்குமே

தீ பிடிச்சுக்குமே

இப்படி ஒரு புதுமையான கருத்தினை கூறி படுக்கை அறையில் ஸ்டைலாக ஒரு கையை ஊன்றி உள்ளாடை இல்லாமல் மேல் சட்டையின் பட்டன்களை திறந்து விட்டு பார்த்ததும் பச்சத் தண்ணி கூட பத்திக்கிற மாதிரி ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கிறார். இவரை இந்த மாதிரி பார்த்ததும் ஷாக் ஆன ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என கேட்டு வருகின்றனர் .

இது நம்ம ஜெனியா

இது நம்ம ஜெனியா

அதிலும் சிலருக்கு அதிர்ச்சி குறையாமல் இது பாக்கியலட்சுமி ஜெனி தானா அல்லது வேறு யாருமா என கண்களை நன்றாக கசக்கி பார்த்து வருகின்றனர் .ஆனாலும் இவர் ஸ்டைலாக படுத்திருக்கும் அழகை பார்த்து பலருக்கு கவிதைகள் கொட்டுகிறது .புதிய பட வாய்ப்புக்காக இப்படி இறங்கி விட்டாரா என பலர் சந்தேகப்பட்டாலும் இவருக்கு திரைப்படங்களை விடவும் சீரியல்களில் நடிப்பது தான் ரொம்ப பிடித்ததாம்.

மனசுக்கு சந்தோஷம்

மனசுக்கு சந்தோஷம்

அதுவும் இதுவரைக்கும் இவர் பல சீரியலில் நடித்து இருந்தாலும் தற்போது நடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் மனதிற்கு சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது .அதுமட்டுமல்லாமல் என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இருந்து வருகிறது என கூறியிருக்கிறார். இவர் இதற்கு முன்பு திரைப்பட நடிகரான ஆர் கே சுரேஷ் உடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் .

எப்படி இருக்க வேண்டும்

எப்படி இருக்க வேண்டும்

அதற்குப் பிறகு இவர் நான் சிங்கிளாக தான் இருந்து வருகிறேன் என கூறி வருகிறார் .ஆனால் தற்போது எனக்கு பிடித்த வருங்கால கணவர் எப்படி வேண்டும் என்று கூறியிருக்கிறார் .அதில் என்னை விட கொஞ்சம் உயரமான வராகவும் கலர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்னை பார்த்துக்கொள்ளும் வகையில் ஒரு வருமானம் உள்ள தொழில் செய்தாலே போதும்.

லவ் புரபோஸ்

லவ் புரபோஸ்

குறிப்பாக அவர் நடிப்பு துறையில் இருக்கவே கூடாது என கூறியிருக்கிறார். இவருடைய இந்த குவாலிஃபிகேஷன் கேட்டதும் பலர் முண்டியடித்துக்கொண்டு இவருக்காக இன்ஸ்டாகிராமில் லவ் ப்ரொபோஸ் செய்துவருகின்றனர். அதிலும் அதிகமாக மேரேஜ் ப்ரொபோஸ் தான் வந்து கொண்டிருக்கிறது. அதெயெல்லாம் பார்த்து நன்றாக ரசிப்பாராம் திவ்யா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+