Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாலு எழுத்து நடிகைக்கு, 5 ஏக்கர் நிலம் தந்த அரசியல்வாதி? ஆக்கிரமிப்பில் சென்னை ஏரி.. பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அதிகாரிகளை பொறுத்தவரை நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பற்றி கவலைப்படுவதே இல்லை.. அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை பற்றியும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் வேதனை தெரிவித்துள்ளார்.

Third Eye Talkies என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அம்பிகா, ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் உருவான விதம் குறித்தும், ஆக்கிரமிப்பு நிலங்களில் அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் விரிவாக பேசியிருந்தார்.

television ambika radha

அம்பிகா ராதா: "ஏஆர்எஸ் - அம்பிகா, ராதா, சரஸம்மா இவங்கதான் ஏஆர்எஸ்.. எம்ஜிஆர் மரணத்தருவாயில் இருந்தபோது, அம்பிகா, ராதா, சரஸம்மா இவர்கள் 3 பேருமே எம்ஜிஆர் காலை கட்டிப்பிடிச்சிட்டு அழறாங்க.. எங்களுக்கு சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோ போல ஒரு ஸ்டுடியோ கட்டணும்னு நீண்ட நாள் ஆசை.. அதனால் ஒரு இடம் வேணும் என்று கேட்கிறார்கள்.

அப்போது திருநாவுக்கரசுதான் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தார். எம்ஜிஆரிடம் இப்படி போய் காலில் அழுது இடம் கேட்க சொன்னதே திருநாவுக்கரசுதான்... அப்போது வளசரவாக்கம் பகுதியில் வீடுகளை கட்டித்தருவதற்காக நிலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்கள் 3 பேருமே எம்ஜிஆரிடம் நிலம் கேட்டதும், எம்ஜிஆர் திருநாவுக்கரசை அழைத்து, 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தருமாறு கூறுகிறார்.

பாரதிராஜா:
இந்த விஷயம் தெரிந்ததும் பாரதிராஜா வர்றார்.. நான்தானே எம்ஜிஆரிடம் இவர்களை அறிமுகப்படுத்தினேன்.. எனக்கு இடமில்லையா? என்று கேட்கிறார். உடனே ஏஆர்எஸ் கார்டனுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே பாரதிராஜாவுக்கும் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பாரதிராஜா விற்றுவிட்டார்.

எம்ஜிஆர் ஒதுக்கி தந்த அந்த இடத்தில்தான் ஏஆர்எஸ் ஸ்டுடியோ கட்டப்பட்டது. அரசு நிலம் 99 வருஷத்துக்கு இலவசமாக இவர்களுக்கு தரப்பட்டது. திரைப்பட சேவைக்காக இந்த இடம் தரப்பட்டது. இந்த ஸ்டுடியோவை செங்கல், சிமெண்ட், கம்பி வைத்து கட்டித்தந்தது, திருநாவுக்கரசும், மூப்பனாரும்தான்..

குளம், குட்டைகள்: அன்று ஏசி சண்முகம், ராமசாமி உடையார், அபபல்லோ ரெட்டி இவர்கள்தான் அன்று அரசியலை தீர்மானித்தார்கள்.. அப்போதெல்லாம் ஏரி, குளம், குட்டைகள் ஒருபொருட்டே இல்லை. பச்சமுத்து, காட்டொங்கொளத்தூரில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார். ஆனால், அரசு ஏன் அங்கே இன்னும் போகவில்லை? அங்கே ஒரு பெரிய ஏரி இருக்கிறது. பஸ்ஸில் போகும்போதே அந்த ஏரியை பார்கக முடியும். இன்று காட்டாங்கொளத்தூர் ஏரியா, எஸ்ஆர்எம் நகராக மாறிவிட்டது.

வேலூர் விஸ்வநாதன்: இதில் வேலூர் விஸ்வநாதனையும் சொல்லியாகணும்.. எம்ஜிஆர் காலத்தில் வேலூர் பூரா விலைக்கு வாங்கிட்டார். அரசு இயங்குகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. இப்படித்தான் ஒரு டிஆர்ஓ, 5 கோடி ரூபாய் வாங்கிட்டு வேலையே வேணாம்னு கிளம்பி போயிட்டாரு.. அதிகாரிகளை பொறுத்தவரை, நீர்நிலை ஆக்கிரமிப்பு ஒரு பொருட்டே இல்லை.. அரசு அதிகாரிகளே ஏமாற்றும்போது, மக்கள் யாரிடம் செல்வது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அதேபோல, கடந்த மாதம் Kingwoods News யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி தந்தபோதும், நடிகைகள் அம்பிகா, ராதா பற்றி கூறியிருந்தார். அதில், ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு ராதாவை அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.. அதற்கு விலையாகவே ஏஆர்எஸ் கார்டன் தரப்பட்டது" என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார்..

தமிழ் ஹீரோயின்: கடந்த வாரம் BBT யுடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியிலும், "என் இனிய தமிழ் மக்களே என்றுசொல்லிவிட்டு, ஒரு தமிழச்சியை கூட இவர் கதாநாயாகியாக்கியது இல்லை.. ராதா, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, இவங்கெல்லாம் வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான். ஏன்? தமிழ் பெண்களிடம் அழகு, அறிவு இல்லையா? அவர்களுக்கு நடிக்க தெரியாதா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+