குக் வித் கோமாளி வித்யுலேகாவின் தாத்தா இவரா? தனுஷ் பேமிலிக்கும் வித்யு ரிலேஷனாமே!
சென்னை: குக் விக் கோமாளி வித்யுலேகாவின் தாத்தா யார் தெரியுமா? புகைப்படம் எடுத்து அவரே வெளியிட்ட பதிவில் கூறியிருக்கிறார்.
நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுலேகா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்துள்ளார்.

பல படங்களில் நாயகியின் தோழியாக வருவார். நிறைய படங்களில் நகைச்சுவையும் செய்துள்ளார். அவர் ரன் ராஜா ரன் என்ற படத்திற்காக ஆந்திர மாநில அரசின் சிறந்த காமெடி நடிகை என்ற விருதை பெற்றுள்ளார்.
இவருக்கும் சஞ்சய் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருடைய உறவினர் கீதாஞ்சலி, செல்வராகவனின் மனைவியாவார். வித்யுலேகா பார்ப்பதற்கு அவருடைய தந்தையை போலவே இருப்பார். அவர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் சூப்பராக சமைப்பதாக செஃப்களிடம் இருந்து கமெண்ட்டுகளை வாங்கினார்.
இவர் சமைத்த ஒரு டிஷ்ஷை தனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என செஃப் வெங்கடேஷ் பட் கேட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரை வித்யு என்றும் அழைப்பர். குக் வித் கோமாளியில் இவருடைய டிரேட் மார்க் சிரிப்பை பாலா கிண்டல் செய்துக் கொண்டே இருப்பார். குக் வித் கோமாளி சீசன் 3 இல் ஃபைனலிஸ்ட் பட்டியலில் வந்தார். ஆனால் அவர் வெல்ல முடியவில்லை.

இவர் சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலைக்கு வி.பி.ராமன் சாலை என முதல்வர் ஸ்டாலின் பெயர் மாற்றினாரே அந்த பெயர்ப் பலகைக்கு பக்கத்தில் நின்றபடி வித்யுலேகா புகைப்படம் எடுத்துள்ளார். இவர் ஏன் அந்த தெருவில் நின்றபடி புகைப்படம் எடுத்தார் என விசாரித்ததில் அவருடைய தாத்தாதான் வி.பி.ராமன் என தெரியவந்தது.
வி.பி. ராமன் இந்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆவார். அவர் வசித்து வந்த சாலைக்குத்தான் வி.பி.ராமன் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

வி. பி.ராமன் அதாவது வெங்கட பட்டாபிராமன் வழக்கறிஞர் மட்டுமல்லாது அவர் ஒரு வழக்கறிஞருமாவார். 1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவருடைய மகன்தான் நடிகர் மோகன்ராமன். இவருடன் சேர்த்து ராமனுக்கு மொத்தம் 3 மகன்கள். பி.எஸ்.ராமன், பி.ஆர்.ராமன் ஆகியோராவர்.
பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட ரான், 1955 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். மேலும் கட்சியின் சட்டத்திட்டங்ளை ஈவெகி சம்பத் மற்றும் இரா. செழியன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். The Man who would not be King என்ற நூலையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர் அண்ணா மறைந்த போது இறுதி ஊர்வலத்தில் வி.பி. ராமன் நடந்தே சென்றார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications