Eeramana Rojave Serial: பிளாக் அன்ட் வொயிட் படத்துல சவுகார் ஜானகி மாதிரி அழாதே!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் கதை ரொம்ப சாதாரணமான கதைதான். ஆனால்,அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காண்பிப்பதால் பலரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
மலரும்,அகிலாவும் அக்கா தங்கைகள். வெற்றி,பு கழ்னு அண்ணன் தம்பிகளை கல்யாணம் செய்துக்கறாங்க. இரண்டு கல்யாணமும் திட்டமிடாமல் நடக்கும் கல்யாணம்தான்.
மலருக்கு வெற்றியின் அண்ணனுடனும், தங்கை அகிலாவுக்கு வேறு மாப்பிள்ளையுடனும் நிச்சயமான கல்யாணம்தான் இப்படி மாறிப்போகுது. வெற்றியின் அண்ணன் விபத்தில் இறந்துவிட்டதால் இப்படி மாறிப் போகிறது.
சீர் வரிசை செய்யலை
பெண் வீட்டார் மாப்பிள்ளைகளுக்கு சரியாக சீர் செய்யவில்லை..தவிர மாப்பிள்ளை வீட்டாரிடம் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது என்று தெரிந்து மாமியாருக்கு மருமகள்களை பிடிக்கவில்லை. கடன் வாங்கின பணம், சீர் வரிசை எல்லாத்தையும் குடுத்துட்டு, பொண்ணுங்களை வாழ வைங்கன்னு சொல்லி, மருமள்களை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.
Nila serial: என்னாது ஆயிரம் கோடி சொத்துக்கு நீலாம்பரி சம்பந்தி செக்யூரிட்டியா?
மலரும் வெற்றியும்
வெற்றியும் மலரும் அப்போதுதான் ஒருவரை ஒருவர் புரிந்து வாழலாம் என்று ஆரம்பிச்சு இருக்கையில், இப்படி ஆகிவிட , இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆனால், வந்து பார்த்தாலும், மாமியார் இது தெரிந்து வீட்டுக்கு வந்து மானம் போக திட்டுகிறார்கள். இதனால் மலரும் வெற்றியுடன் பேசபயப்பட்ட, வெற்றி வீட்டை விட்டு வெளியில் போயிடறான்.
எங்கே போனாரோ
மலர் கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்க, என்னடி சாப்பாடு அப்படியே இருக்கு.. சாப்பிடலியான்னு கேட்கறாங்க அம்மா. ஸ்கூலில் வேலை அதிகம் இருந்துச்சும்மா... அதான் சாப்பிடலைன்னு சொல்றா, ஏண்டி இப்போ அழறேன்னு அம்மா கேட்க அது ஒன்னும் இல்லைம்மா வெற்றி மாமா நினைப்பு வந்திருக்கும். அதான் இப்படி அழறான்னு சொல்றா அகிலா.
சவுகார் ஜானகி மாதிரி
இங்கே பாரு புள்ளே... மாமா கூட பேசணும்னா ஒரு போனை போட்டு பேசு. எப்பப்பாரு மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு, பிளாக் அன்ட் வொயிட் படத்துல வர சவுகார் ஜானகி மாதிரி அழுதுகிட்டு இருக்கதேன்னு சொல்றா அகிலா.
இப்படி புருஷன் பொண்டாட்டி பிரிவு, அக்கா தங்கைகள் ஆறுதல்.. வரதட்சணை சீர் செய்யலேன்னா படும் கஷ்டம் பற்றி எல்லாம் சீரியலில் சொல்லி இருப்பதால் நன்றாக இருக்கிறது.