வில்லியாக மாறும் வசு.. வெளிச்சத்துக்கு வந்த அரசு குணம்.. அதிரடி காட்டும் சக்தி.. பரபரப்பான திருப்பம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 10ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
விருந்தினராக வந்த வசு மண்டபத்தில் கேட்ட கேள்வியால் அரசு கோபத்தில் கத்துகிறார்.
திருமண விஷயத்தில் குணசேகரனின் மீது சக்திக்கு சந்தேகம் வருகிறது.
கேள்வி கேட்ட வசு:எதிர்நீச்சல் சீரியலில் அதிக அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த திருப்பங்கள் நடைபெற தொடங்கிவிட்டது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புகள் தற்போது அவிழ்ந்து வரும் நிலையில், இன்றைய எபிசோட் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நேற்று எபிசோடில் வசு கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்கேஆர் குடும்பம் திணறிக் கொண்டிருந்தது.

சக்திக்கு வந்த சந்தேகம்:இந்த நிலையில் இன்றைய எபிசோடு காண ப்ரமோவில் அண்ணன் மீது சந்தேகமாக தான் இருக்கிறது என்று சக்தி சொல்ல, இந்த நிச்சயம் நடப்பதற்கு என்ன வேணா பண்ணலாம் என்று ஜனனியும் தனக்கு குலசேகரன் மீது இருக்கும் சந்தேகத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது வசு புது பிரச்சனையை ஏற்படுத்துகிறார்.

கோபப்படும் அரசு:மண்டபத்தில் எஸ்கேஆர் குடும்பம் மற்றும் குணசேகரன் குடும்பம் அனைவரும் ஒன்றாக இருக்கும் இடத்தில் நீங்க பண்றதுக்கு பெயர் எல்லாம் கல்யாணம் கிடையாது. பியூர் பிசினஸ் அக்ரிமெண்ட் என்று போட்டு உடைக்க, அதை கேட்டு கோபமான அரசு ஏய் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கோபத்தோடு கத்துகிறார். அந்த பக்கமாக கம்பீரமாக வரும் குணசேகரன் என்ன ஆச்சு என்று கேட்டுக் கொண்டு வருகிறார்.

ஆறு பிரச்சனை:தற்போது இந்த பரபரப்பான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் ஏற்கனவே ஸ்பெஷல் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஜனனி ஆதிரையில் எங்கேஜ்மென்ட் நிறுத்துவதற்காக ஆறு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் விருந்தாளியாக வந்து எதிரியாக வசு மாறுகிறார். பிறகு ஜான்சி ராணியும், கரிகாலனும் அடுத்த பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். இனி நடக்கப்போவது என்ன? இந்த எங்கேஜ்மென்டை நிறுத்துவதற்காக நடக்கும் சூழ்ச்சிகள் என்ன என்பது பற்றி இன்று தெரியும் என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications