பாக்யராஜ் மனைவி மட்டும் அப்போ அதை பண்ணலன்னா நான் இல்ல!.. மனம் திறந்த எதிர்நீச்சல் ரேணுகா
சென்னை: நடிகர் பாக்யராஜ் மனைவி மற்றும் பாக்யராஜ் பற்றி எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் நடிகை பிரியதர்ஷினி பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.
நடிகர் பாக்யராஜ் உடன் தாவணி கனவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அந்த திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றியும் அதில் பேசியிருக்கிறார்.

தமிழில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "சுவரில்லா சித்திரங்கள்" என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் பாக்கியராஜ் ஒரு இயக்குனராக அறிமுகம் ஆக்கியிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு இயக்குனராக பலருடைய மனதிலும் கவர்ந்து விட்டார். அதற்கு காரணம் அவருடைய படங்களில் பெரும்பாலானவை குடும்ப திரைப்படங்களாகவே இருந்ததுதான்.
பாக்யராஜின் திரைப்படங்களில் பெரும்பாலும் யதார்த்தம் நிறைந்ததாகவும், அதிக சினிமாதளம் இல்லாததாகவும் இருப்பதாகவே அதிகமான ரசிகர்கள் அதை விரும்பி பார்த்து வந்தனர். அதிலும் ஆரம்ப காலத்தில் அவர் இயக்கிய அந்த ஏழு நாட்கள், தூரல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பு கொடுத்தது. இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பது போன்று தான் அப்போது பாக்யராஜ்க்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தான் இயக்கும் திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து பாக்கியராஜ் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விட்டார். அந்த வகையில் அவர் நடித்த முந்தானை முடிச்சு மற்றும் தாவணி கனவுகள் திரைப்படம் இரண்டுமே அதிகமான வரவேற்பை பெற்று நடுத்தர குடும்பத்து மக்களையும் அதிகமாக கவர்ந்திருந்தது. காரணம் அந்த இரண்டு திரைப்படங்களில் பாக்கியராஜ் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவராக நடித்திருப்பார்.
இந்த நிலையில் தாவணி கனவுகள் திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜின் கடைசி தங்கச்சியாக நடிகை பிரியதர்ஷினி நடித்திருப்பார். அவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய எதார்த்தமான நடிப்பை பார்த்து பிடித்துப்போன ரசிகர்கள் இவரை அடிக்கடி பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் கரிகாலனோடு இவர் பேசும்போது அடிக்கும் நக்கல் குணசேகரனிடம் பேசும்போது டைமிங் கவுண்டர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
ஆனால் இவர் பல வருடங்களுக்கு முன்பு குழந்தையாகவே இதே போலவே நக்கல் அடித்திருக்கிறார். அதுவும் "தாவணி கனவுகள்" திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் மட்டுமல்லாமல் நடிகர் சிவாஜியையும் அடிக்கடி கலாய்க்கும் குட்டி குழந்தையாக நடித்திருப்பார். இந்த நிலையில் தான் அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் பாக்யராஜோடு அவருடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அப்போது பாக்கியராஜ் இடம் அவருடைய மனைவி பூர்ணிமா பற்றி பேசி இருக்கிறார். அப்போது எனக்கு இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பை வாங்கி தந்தது பூர்ணிமா தான் என்பதை கூறியிருக்கிறார். அதோடு அப்போது பிரியதர்ஷினி ஏதோ ஒரு சின்ன திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அவருடைய நடிப்பை பார்த்து பிடித்துப்போன பூர்ணிமா இந்த பெண் தாவணி கனவுகள் திரைப்படத்திற்கு சரியாக இருப்பார் என்று இவரை பரிந்துரை செய்தாராம்.
அதனை நினைவுக்கூர்ந்த பிரியதர்ஷினி, பூர்ணிமா பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். அன்னைக்கு மட்டும் பூர்ணிமா எனக்கு அப்படி ஒரு உதவி செய்யலைன்னா என் வாழ்க்கை எப்படியோ போய் இருக்கும் என்றும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications