Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜீவானந்தத்தை பற்றி ரகசியத்தை கூறிய அப்பத்தா.. அதிர்ச்சியில் குணசேகரன்.. ஜனனியின் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் கோமாவில் இருந்த அப்பத்தா முதல் முறையாக வாய் திறந்து பேச தொடங்கி இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 August 19th Promo full update

அந்த வகையில் ஜீவானந்தத்தை பற்றி சொன்ன வார்த்தை கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லப்படுவது போன்று எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது எதிர்நீச்சல் சீரியலில் தான் சாத்தியமாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இத்தனை மாதங்களாக கோமாவில் இருந்த அப்பத்தா முதல் முறையாக வாயைத் திறந்து பேசி இருக்கிறார்.

Ethirneechal Serial 2023 August 19th Promo full update

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக கதிர் மற்றும் வளவன் குரூப் வீட்டை சுத்து போட்டு இருக்கின்றனர். அப்போது ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஜனனியும் ஜீவானந்தம் வீட்டிற்கு அருகில் வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் அப்பத்தாவை பேசு பேசு என்று பேசுவிடாமல் கத்திக் கொண்டிருந்த குணசேகரனுக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

அதாவது நேற்றைய எபிசோடில் நந்தினி மற்றும் ரேணுகா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் குணசேகரன் அப்பதாவை கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்தார். அதுவும் ஹை லெவலில் அவருடைய சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் சீரியல் பார்த்தவர்களும் காதை பொத்திக் கொள்ள வேண்டிய நிலைமை இருந்தது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்த ஆடிட்டர் மற்றும் வக்கீல் அப்பத்தாவிடம் பேசி இருந்தனர்.

Ethirneechal Serial 2023 August 19th Promo full update

அப்போது அப்பா எதுவும் நினைவு இல்லாதது போன்று முழித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுகான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தத்துக்கு உனக்கும் என்ன சம்பந்தம் பேசு என்று குணசேகரன் திட்ட, அதற்கு அப்பத்தா, "ஜீவானந்தம் செஞ்சது எல்லாம் எனக்காகத்தான்" என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதைக் கேட்டு குணசேகரன் மட்டுமல்லாமல் வீட்டிலிருந்து அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர்.

அதே நேரத்தில் ஜீவானந்தம் தன்னுடைய குழந்தை வெண்பாவோடு ஜாலியாக வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு வெளியே நின்று வளவனின் ஆட்கள் இதுதான் ஜீவானந்தம் வீடு என்று சொல்ல அனைவரும் ஆக்ரோஷமாக வீட்டிற்குள் செல்ல இருக்கின்றனர். இப்படியாக பிரமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 August 19th Promo full update
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+