எதிர்நீச்சல்: குணசேகரன் சொல்லும் பொய்.. கோபத்தில் ஜான்சி ராணி.. வெளிவந்த உண்மை.. திடீர் பரபரப்பு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரன் சந்திக்கப்போன தில்லைநாயகம் கேட்ட கேள்விக்கு குணசேகரன் நக்கலாக பொய் சொல்கிறார்.

அது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்த ஜான்சி ராணி ஆதிரை பற்றிய ரகசியத்தை தெரிந்து கோபப்படுகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் இதுவரைக்கும் நக்கல் நையாண்டித்தனம் பண்ணிக்கொண்டு அனைவரையும் உருட்டி மிரட்டி கொண்டிருந்த குணசேகரன் எப்போது நெஞ்சு வலிக்கு பிறகு பக்கவாதம் வந்து கை செயலிழந்து இருக்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தத்தை பழி வாங்க வேண்டும் என்று ரிட்டையர்டு போலீஸ் ஆபீசரை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார்.

அதே நேரத்தில் ஸ்கூலுக்கு தன்னுடைய மகளை கூப்பிட போன ரேணுகாவிற்கு டான்ஸ் டீச்சராக மாறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனி தொடர்ச்சியாக தான் இந்த ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறேன் என்று ரேணுகாவும் வாக்கு கொடுக்க, அதற்கு நந்தினி நான் உங்களுக்கு தேவையான உதவிகளை எல்லாம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் பல நாட்களாக காணாமல் இருந்து ஜான்சி ராணி மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது கரிகாலனை பார்த்து விசாலட்சுமி போடா என்று கத்த, "என் பொண்டாட்டிய என் கூட அனுப்பி வைங்க, எங்க வீட்டுல போயி நான் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணிக்கிறேன்" என்று கரிகாலன் சொல்கிறார்.

அதற்கு ஜான்சி ராணி," நீ எல்லாம் முடிஞ்சிடுச்சின்னு சொன்னியேடா..?" என்று அதிர்ச்சியாக கேட்க, அதற்கு கரிகாலன் அப்படி தாமா இவ சொல்ல சொன்னா என்று ஆதிரையை போட்டுக் கொடுக்க அனைவரும் வீட்டில் மாறி மாறி முகத்தை பார்த்துக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் சக்தியும் ஜனனியும் பைக்கில் ஜீவானந்தத்தின் ஊரை தேடி போய்க் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து குணசேகரன் பார்க்க வந்த ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி, கடற்கரையில் குணசேகரனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது குணசேகரன் என்னப்பா கையை ஒரு மாதிரி புரட்டி வைத்துக்கொண்டு இருக்கிறா? என்று கேட்க, அதற்கு குணசேகரன் அரிசி மூட்டை மேல விழுந்துடுச்சு, சுளுக்குடிச்சி. சில வேலைகளை நாம தானே பார்த்தாக வேண்டியது இருக்கு என்று பொய் சொல்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்று சீரியல் கலகலப்பாக இருக்குமா? அல்லது விறுவிறுப்பாக இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications