Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல்: குணசேகரன் சொல்லும் பொய்.. கோபத்தில் ஜான்சி ராணி.. வெளிவந்த உண்மை.. திடீர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் மூன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் குணசேகரன் சந்திக்கப்போன தில்லைநாயகம் கேட்ட கேள்விக்கு குணசேகரன் நக்கலாக பொய் சொல்கிறார்.

Ethirneechal Serial 2023 August 3rd promo full update

அது நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்த ஜான்சி ராணி ஆதிரை பற்றிய ரகசியத்தை தெரிந்து கோபப்படுகிறார்.

எதிர்நீச்சல் சீரியலில் இதுவரைக்கும் நக்கல் நையாண்டித்தனம் பண்ணிக்கொண்டு அனைவரையும் உருட்டி மிரட்டி கொண்டிருந்த குணசேகரன் எப்போது நெஞ்சு வலிக்கு பிறகு பக்கவாதம் வந்து கை செயலிழந்து இருக்கிறார். இந்த நிலையில் ஜீவானந்தத்தை பழி வாங்க வேண்டும் என்று ரிட்டையர்டு போலீஸ் ஆபீசரை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்திருக்கிறார்.

Ethirneechal Serial 2023 August 3rd promo full update

அதே நேரத்தில் ஸ்கூலுக்கு தன்னுடைய மகளை கூப்பிட போன ரேணுகாவிற்கு டான்ஸ் டீச்சராக மாறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இனி தொடர்ச்சியாக தான் இந்த ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறேன் என்று ரேணுகாவும் வாக்கு கொடுக்க, அதற்கு நந்தினி நான் உங்களுக்கு தேவையான உதவிகளை எல்லாம் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் பல நாட்களாக காணாமல் இருந்து ஜான்சி ராணி மீண்டும் குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது கரிகாலனை பார்த்து விசாலட்சுமி போடா என்று கத்த, "என் பொண்டாட்டிய என் கூட அனுப்பி வைங்க, எங்க வீட்டுல போயி நான் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணிக்கிறேன்" என்று கரிகாலன் சொல்கிறார்.

Ethirneechal Serial 2023 August 3rd promo full update

அதற்கு ஜான்சி ராணி," நீ எல்லாம் முடிஞ்சிடுச்சின்னு சொன்னியேடா..?" என்று அதிர்ச்சியாக கேட்க, அதற்கு கரிகாலன் அப்படி தாமா இவ சொல்ல சொன்னா என்று ஆதிரையை போட்டுக் கொடுக்க அனைவரும் வீட்டில் மாறி மாறி முகத்தை பார்த்துக் கொள்கின்றனர். அந்த நேரத்தில் சக்தியும் ஜனனியும் பைக்கில் ஜீவானந்தத்தின் ஊரை தேடி போய்க் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial 2023 August 3rd promo full update

அதைத்தொடர்ந்து குணசேகரன் பார்க்க வந்த ரிட்டையர்டு போலீஸ் அதிகாரி, கடற்கரையில் குணசேகரனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது குணசேகரன் என்னப்பா கையை ஒரு மாதிரி புரட்டி வைத்துக்கொண்டு இருக்கிறா? என்று கேட்க, அதற்கு குணசேகரன் அரிசி மூட்டை மேல விழுந்துடுச்சு, சுளுக்குடிச்சி. சில வேலைகளை நாம தானே பார்த்தாக வேண்டியது இருக்கு என்று பொய் சொல்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்று சீரியல் கலகலப்பாக இருக்குமா? அல்லது விறுவிறுப்பாக இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+