Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்நீச்சல்: ஆதிரை கழுத்தில் தாலி கட்டிய கரிகாலன்.. ஜனனி செய்த பைத்தியக்காரத்தனம்.. திடீர் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்த ஆதிரை திருமணம் இன்று நடைபெற்று இருக்கிறது.

ஜனனி எந்த செயலும் செய்ய முடியாமல் நடுத்தெருவில் விழுந்து அழுது கொண்டிருக்கிறார்.

மொத்த குடும்பமும் ஜனனி ஆதிரை பிரச்சனையை பாத்துக்குவா என்று நினைத்திருந்த நிலையில் குணசேகரன் தான் நினைத்ததை சாதித்து விட்டார்.

Ethirneechal serial 2023 June 23th promo update Karikalan tied a thali around Adhirs neck

எதிர்நீச்சல் சீரியலில் பல மாதங்களாகவே இழுத்துக் கொண்டு இருந்த ஆதிரை திருமணம் இன்றைய எபிசோட்டில் நடைபெற இருக்கிறது. ஆதிரை திருமணம் யாரோடு நடைபெறும் என்று எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது வெளியான பிரமோவில் கரிகாலன் ஆதிரை கழுத்தில் நடு தெருவில் தாலி கட்டி இருக்கிறார்.

நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு குறித்த நேரத்திற்குள் அருண் வராததால் ஜனனி தவித்துக் கொண்டிருக்க, கௌதம் தன்னால் முடிந்த அளவிற்கு எல்லா இடமும் தேடி விட்டு இங்கே இருந்து அருண் கிளம்பி போயிருக்கிறான். ஆனால் பாதி இடத்திற்கு பிறகு அவன் காணாமல் போய் இருக்கிறான். எங்க போனான் என்று தெரியவில்லை என்று கௌதம் கூறி விட அதிர்ச்சியில் ஜனனி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஜனனி கோவிலில் ஆதிரையோடு இருக்கும் விஷயம் குணசேகரனுக்கு தெரிய வர காரில் வேகமாக குணசேகரன் கரிகாலன் மற்றும் தன்னுடைய தம்பிகளை கூப்பிட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கும் வழியில் கூட பல தடங்கல்கள் வந்தாலும் தான் கண்டிப்பாக எப்படியும் அந்த கோவிலுக்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவேன் என்று கூறிக்கொண்டு வந்தார்.

அதே நேரத்தில் கரிகாலா... உன்னுடைய கல்யாணம் ரொம்ப வித்தியாசமா நடக்க போகிறது என்றும் கூறியிருந்தார். அப்போது கூட இந்த கல்யாணம் நடக்கலைன்னா உங்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன் எல்லார் தலையையும் சீவி போட்டுடுவேன் என்று ஜான்சி ராணி மிரட்டி கொண்டு இருந்தார். அந்த நிலையில் இந்த இடம் அண்ணனுக்கு தெரிந்துவிட்டது இங்கே இப்போ வந்துருவாரு நாம இங்கிருந்து போகணும் என்று சக்தி கூறிக் கொண்டிருந்தார்.

அனைவரும் கோவிலை விட்டு போய்விடலாம் என்று கிளம்பும்போது சரியாக குணசேகரன் குடும்பத்தோடு அந்த கோவிலுக்கு வந்துவிட கோவிலில் பெரும் கலவரம் நடக்கிறது. ஆதிரையை ஜான்சி ராணி அடிக்காத குறையாக போட்டு உலுக்கி எடுத்து மிரட்டிக் கொண்டிருக்க, எல்லா பிளானும் நான் மட்டும்தான் போட்டேன் நான்தான் ஆதிரை அருணுக்கு கல்யாணம் செய்து வைக்க நினைத்தேன் என்று ஜனனி மொத்த பலியையும் தன் மீது போட்டுக் கொள்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரையை கோவிலில் இருந்து தரதரவென இழுத்தபடி குணசேகரன் ஒரு பக்கமும் கதிர் ஒரு பக்கமும் இழுத்துக் கொண்டு வர, சக்தி அதை தடுக்க பார்க்க ஞானம் சக்தியை தள்ளி விடுகிறார். அதைத் தொடர்ந்து மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்த விசாலாட்சி ரேணுகாவிடம் நம்மளையே போட்டு அந்த பாடு படுத்தினானே அங்க போய் என்ன செய்யப் போறானோ என்று பயப்படுகிறார்.

அதற்கு ரேணுகா பயப்படாதீங்க அத்தை அது எல்லாத்தையும் ஜனனி பாத்துக்குவா என்று கூறுகிறார். அந்த நேரத்தில் நடுத்தெருவில் வைத்து குணசேகரன் அங்கு இருக்கும் ஊர்க்காரர்களின் முன்னாடியே இது என்னுடைய ஒரே தங்கச்சி, அவளுக்கு நாங்க இங்க வச்சு கல்யாணத்தை பண்ண போறோம் என்று சொல்லி கையில் இருந்த மஞ்சள் கயிற்றை கரிகாலனிடம் கொடுத்து கரிகாலா கட்டுடா தாலியை என்று கூறுகிறார்.

நந்தினி, ரேணுகா என அழுது கொண்டு இருக்க ஆதிரை கழுத்தில் கரிகாலன் தாலி கட்டி விடுகிறார். இதை பார்த்த ஜனனி தெருவில் விழுந்து அழுகிறார். தற்போது இந்த பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த மாதிரி கல்யாணம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கலையே, கடைசியில் ஆதிரைக்கு கரிகாலனோடு கல்யாணம் முடிந்து விட்டதா என்று பலரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+