குணசேகரனின் சூழ்ச்சியை கண்டுபிடித்த அப்பத்தா..மனம் மாறிய விசாலாட்சி..நந்தினியை மிரட்டிய ஜனனி

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் கேரக்டரை அனைவரும் முன்னாடியும் அப்பத்தா நிரூபித்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் குணசேகரன் ஆதிரையின் திருமண விஷயத்தில் டபுள் கேம் விளையாடி வருகிறார்.

இதுவரைக்கும் மருமகளுக்கு வில்லியாக இருந்த விசாலாட்சி மருமகள்களின் மீது பாசத்தை காட்ட தொடங்குகிறார்.

நந்தினி, அப்பத்தா மற்றும் ஜனனியை தவறாக புரிந்து கொண்டிருப்பதற்கு ஜனனி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

மனம் மாறிய மாமியார்

மனம் மாறிய மாமியார்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இந்த வாரத்தில் பல எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. இதுவரைக்கும் விசாலாட்சி தன்னுடைய மருமகள்களிடம் கடுமையாக நடந்து நடந்து கொண்டு இருந்தார். ஆனால் இன்று முதல் முறையாக மருமகள்களின் மீது பாசத்தை காட்ட தொடங்கி இருக்கிறார். தன்னுடைய மகன் குணசேகரனுக்கு எதிராக சமீப காலமாக எதிர்த்து பேசி வரும் விசாலாட்சி ஜனனியை பற்றி நல்ல விதமாக ஜனனியின் அம்மாவிடம் பேசுகிறார்.

இதுவரைக்கும் இருந்த குணம்

இதுவரைக்கும் இருந்த குணம்

கால் மூட்டு வலியில் இருக்கும் விசாலாட்சிக்கு அடிக்கடி மருந்து போட்டுக் கொண்டிருந்தால் சரியாகாது அதற்கு முறையான சிகிச்சை செய்ய வேண்டும் என்று சென்னைக்கு ஜனனி கூட்டிக்கொண்டு சென்றிருக்கும் நிலையில் அங்கே வரும் ஜனனியின் அம்மாவிடம் விசாலாட்சி நல்ல முறையில் பேசுகிறார். இதுவரைக்கும் வீட்டில் சம்மந்தியிடம் கடுமையாக தான் பேசிக் கொண்டிருந்தார். ரேணுகாவின் அம்மாவாக இருந்தாலும் சரி, நந்தினி என் அப்பாவாக, இருந்தாலும் சரி, இல்லை ஈஸ்வரியின் அப்பாவாக இருந்தாலும் சரி தங்கள் வீட்டில் பெண் கொடுத்து விட்டால் தங்களுக்கு அடிமைகள் என்கிற மாதிரி தான் விசாலாட்சி நடந்து கொண்டு இருந்தால் ஆனால் இப்போது முற்றிலும் மாறி இருக்கிறார்.

அசிங்கப்படுத்திய அப்பத்தா

அசிங்கப்படுத்திய அப்பத்தா

இந்த நிலையில் குணசேகரன் ஒரு பக்கம் ஆதிரைக்கு எஸ் டி ஆர் தம்பியோடு திருமணம் செய்து வைக்க சரி என்று அப்பத்தாவிடம் 40% ஷேர் எனக்கு வேண்டும் என்று டீலிங் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் ஜான்சி ராணி இடமும் கரிகலனுக்கு தான் திருமணம் செய்து கொடுப்பேன் என்று வீடியோவில் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தனது தங்கைக்காக எல்லாமே செய்வது போல பேசிக் கொண்டிருக்கும் குணசேகரனிடம் நீ 40% ஷேருக்காக தானே இப்படி செய்கிறாய் என்று அனைவரும் முன்னிலையிலும் அப்பத்தா பேசி அசிங்கப்படுத்துகிறார்.

புரிஞ்சிக்காத நந்தினி

புரிஞ்சிக்காத நந்தினி

இந்த நிலையில் அப்பத்தா 40% ஷேர் குணசேகரனின் பெயருக்கு எழுதிக் கொடுக்க சம்மதம் என்று சொன்னதால் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மூவரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதை வைத்து தான் தங்களை காப்பாற்ற வைத்திருந்தார்கள். ஆனால் அதையும் இப்போது அவர்களுடைய ரத்த சொந்தத்துக்கு ஆக கொடுக்க முடிவு செய்துவிட்டார்களே என்று குழம்பிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல நந்தினி அப்பதாவுக்கு சாதமாக தான் ஜனனியும் இருக்கிறார் என்று ஜனனியை முகத்துக்கு நேராகவே திட்டுகின்றனர். இதனால் ஜனனி நீங்கள் என்னிடம் பேசாமல் இருக்காதீங்க. நான் உங்களை என்னுடைய அக்கா என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்பத்தா என்ன முடிவு எடுத்திருக்காங்க எனக்கு தெரியாது. நான் உங்களுக்காக தான் இந்த வீட்டை விட்டு போன பிறகு மீண்டும் திரும்பி வந்தேன் என்று விளக்குகிறார். பிறகு நந்தினி சமாதானமாகி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+