எதிர்நீச்சல்: அப்பத்தா விஷயத்தில் ஜனனி கண்டுபிடித்த உண்மை.. ஜீவானந்தம் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 16ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அப்பத்தா இருந்த கார் தீப்பிடித்த இடத்தில் இருந்து அப்பத்தாவின் புடவையை ஜனனி கண்டுபிடித்து இருக்கிறார்

அதே நேரத்தில் குணசேகரன் செஞ்ச தப்பை வெளிய கொண்டுவர எந்த ஆதாரமும் இல்லை என்று ஜீவானந்தம் ஈஸ்வரி இடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு போலீஸ் வந்துவிடுகிறது. இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அப்பத்தா இறந்து போய்விட்டதாக குணசேகரனும் கதிர் மற்றும் ஞானமும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே குணசேகரன் பாலில் மயக்க மருந்து கொடுத்து அப்பத்தாவை மயக்கம் அடைய வைத்து அதற்கு பிறகு ஹாஸ்பிடலுக்கு தானே கூட்டிட்டு போவது போன்று குணசேகரன் நாடகமாடி இருந்தார்.
இந்த நிலையில் வீட்டுப் பெண்கள் எல்லோரும் மருத்துவமனையில் போய் தேடிப் பார்த்தபோது அங்கு அப்பத்தா இல்லாததால் எல்லோரும் சந்தேகத்தோடு குழப்பத்தில் இருந்தனர். அப்போது வீட்டிற்கு அனைவரையும் ஞானம் வர வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வந்த ஞானம் மற்றும் கதிர், அப்பத்தாவை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கும்போது தங்களை நோக்கி சிலர் துப்பாக்கியால் சுட்டதால் அவர்களை தேடி நாங்கள் காரை விட்டு இறங்கிய போது காரில் இருந்த குண்டு வெடித்தது.

அப்போது உள்ளே மயக்கத்தில் இருந்த அப்பத்தாவும் காரோடு எரிந்து போய் விட்டார் என்று ஞானம் மற்றும் கதிர் வீட்டில் வந்து தகவல் கொடுத்து இருந்தனர். இதை நம்பாத ஜனனி மற்றும் சக்தி இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பற்றி தெரிந்து கொண்டு அங்கு விசாரிப்பதற்காக வந்திருந்தனர்.
அதே நேரத்தில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை தேடி போயிருந்தார். இப்படியாக இருந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கார் இருந்த இடத்தில் கிடந்த அப்பத்தாவின் புடவையில் ஒரு சில பகுதி சக்தி மற்றும் ஜனனியின் கையில் கிடைத்திருக்கிறது.
அதே நேரத்தில் வீட்டில் ரேணுகா நந்தினி அழுது கொண்டிருக்க அங்கு வரும் விசாலாட்சி அந்த அம்மா எங்கே என்று ரேணுகாவிடம் கேட்க அதற்கு ரேணுகா அழுது கொண்டே போயிடுச்சி, உங்க பையனுவ மொத்தமாக கொண்டு போய் சேர்த்துட்டாங்க என்று கதறி அழுது கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்தித்திருக்கிறார். அப்போது ஜீவானந்தம் குணசேகரன் செஞ்ச தப்ப வெளிய கொண்டுவர எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது அங்கு போலீஸ் வருகின்றனர். அப்போது ரேணுகாவின் பக்கத்தில் வெண்பா இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அப்பத்தாவின் புடவையை கையில் வைத்துக் கொண்டு ஜனனி குணசேகரனை விடவே மாட்டேன் அப்பத்தா என்று கதறி அழுது கொண்டிருக்கும் போது அதை போலீஸ் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் இனி இன்று இரவு என்ன நடக்கப் போகிறது என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
கடைசியில் ஒரு வழியா வருது.. சென்னை லூலூ மால்.. தொடங்குது கட்டுமானம்.. எங்கே வருது தெரியுமா? -
ஈரான் எதிர்பாராத அட்டாக்.. பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெரிய கேஸ் ஆலைகள் மூடல்! உலகிற்கே பாதிப்பு -
ராகுலுக்கு செக்.. செங்கோட்டையை நோக்கி ‘சூரியன்’.. ஸ்டாலினின் 3வது அணி ரெடி.. உடையும் இந்தியா கூட்டணி -
வேற யாராவதுன்னா ஜெயில்தான்.. விஜய்யை கட்டிப்போட்ட அந்த 25 பேஜ்.. அதிர்ச்சி தரும் 4 முக்கிய புகார்கள்! -
வாயை கூட திறக்காத சீனா.. ஈரான் விவகாரத்தில் ட்விஸ்ட் கொடுக்கும் ஜின்பிங்.. என்ன மேட்டர் தெரியுமா? -
99% எல்லாம் ஓவர்.. 24 மணி நேரம்தான் டைம்.. ராகுல் காந்திக்கு ஸ்டாலின் டெட் லைன்.. காங்கிரஸ் ஷாக் -
இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்! -
தொடக்கூடாத கையைத் தொட்டதா ஈரான்? ஜப்பான் செய்த அதே தவறு.. 30 விநாடியில் மாறப்போகும் உலக வரைபடம்! -
ஓபிஎஸ் திமுகவில் சேர்ந்ததற்காக கார் ஓட்ட மறுத்தாரா டிரைவர்? வைரல் வீடியோவிற்கு விளக்கம் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பற்றி ரோகிணிக்கு தெரிந்த உண்மை.. வீட்டை விட்டு போன மீனா! முத்து எடுத்த முடிவு -
ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி! -
இந்திய அணி ஏமாற்றி வென்றுவிட்டது.. ஹெட்மயர் விக்கெட்டில் ஐசிசி தில்லு முல்லு.. முகமது ஆமீர் புகார்!












Click it and Unblock the Notifications