எதிர்நீச்சல்: மீண்டும் வீட்டிற்கு வந்த குணசேகரன்.. கோபப்படுத்தும் தர்ஷன்.. மாட்டிக்கொள்ளும் கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
அதில் ஜெயிலில் இருந்த குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தர்ஷனிடம் குணசேகரன் ஈஸ்வரி பற்றி பேச தர்ஷன் கோபப்படுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி அறிமுகம் ஆன இரண்டாவது நாளிலேயே ஜெயிலுக்கு போவது போன்ற காட்சிகள் அமைந்து இருந்தது. ஜெயிலில் இருந்து ஒரு வாரம் கழித்து தான் வருவேன் என்று கதையை நகர்த்தி கொண்டு இருந்த நிலையில் இன்று வெளிய ப்ரோமோவில் குணசேகரன் மீண்டும் வீட்டிற்கு வந்து இருக்கிறார்.
கோவிலுக்கு அண்ணன் அப்படியே வருவார் என்று ஒரு நாள் எபிசோட்டில் சொன்னார்கள் ஆனால் அடுத்த நாள் எபிசோட்டில் வீட்டிற்கு வந்து விசாலாட்சியை கூட்டிக்கொண்டு அண்ணன் கோவிலுக்கு வருவார். அதற்குள் ஜீவானந்தத்தையும் அப்பத்தாவையும் போட்டு தள்ள பிளான் போட்டு விட வேண்டும் என்று தான் திருவிழாவுக்கு இரண்டு நாளைக்கு முன்பு கரிகாலனும் கதிரும் கிள்ளிவளவனோடு போயிருக்கின்றனர்.

இந்த நிலையில் அதே ஃபங்ஷனுக்கு ஜீவானந்தமும் கதிரையும் குணசேகரனையும் போட்டுத் தள்ளுவேன் என்று கிளம்பி போயிருக்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் காரில் வீட்டு மருமகள்கள் போய்க் கொண்டிருக்கும் போது அவர்களிடம் தொந்தரவு செய்யும் விதமான வேலைகளை ஜான்சி ராணி செய்து கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து கதிர் இன்னொரு பெண்ணிடம் செல்போனில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்க அப்போது கரிகாலன் மாமா லேட் பண்ணுனா பிளான் டைவ் ஆயிடும் என்று பேச அப்போது வளவன் இவர்களின் நடவடிக்கையை பார்த்து கோபமாகிவிட்டார். அதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த குணசேகரன் தர்ஷனிடம் என்னைக்கு நீ உங்க ஆத்தா பேச்சைக் கேட்க ஆரம்பிச்சியோ அன்னைக்கே உன் புத்தி மறத்து போச்சு என்று பேசுகிறார்.

அதற்கு தர்ஷன் குணசேகரனை முறைத்த வண்ணமாக பார்த்துக் கொண்டே இருக்க அதற்கு குணசேகரன் என்னடா நான் பேசிக்கிட்டே இருக்கேன் இவன் இப்படி முழிக்கிறான் என்று சொல்ல அதற்கு பக்கத்தில் இருக்கும் ஞானம் அவன் முழிக்கல அண்ணே முறைக்கிறான் என்று ஏத்தி விடுகிறார். அதற்கு குணசேகரன் முறைப்பான்ல, வளர்ப்பு அப்படி என்று திட்ட விசாலாட்சி என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய ப்ரோமோ முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications