மாரிமுத்து இறப்பிற்கு.. சீரியலில் மனைவியாக நடித்த கனிகா சொன்ன வார்த்தை.. வருத்தத்தில் ரசிகர்கள்
சென்னை: சன் டிவில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார்.
அவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள் அரசியல் பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரோடு எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்களில் மத்தியில் தனக்கென்று தனி அடையாளம் விட்டு சிம்ம சொப்பனமாக குணசேகரன் கேரக்டரில் மிரட்டிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்திருக்கிறார். இவருடைய மறைவு இந்த சீரியலின் ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்திருக்கிறது.
காலையில் இந்த செய்தி வெளியான நேரத்தில் இருந்து இது உண்மையாக இருக்காது என்று பலரும் தெரிவித்து இருந்த நிலையில் அவருடைய உயிர் பிரிந்து விட்டது என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியானதை தொடர்ந்து அதிகமான ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதோடு அவரோடு சீரியலில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றனர்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் குணசேகரனுக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா தன்னுடைய இரங்கல் குறித்து பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் என்னால் பேசவே முடியவில்லை. என்னால் இதை நம்பவும் முடியவில்லை. மாரிமுத்து போன்ற ஒரு மனிதரை நான் பார்த்ததும் இல்லை, இனி பார்க்கப் போவதுமில்லை.
சீரியலில் மட்டும் தான் அவர் குணசேகரன் ஆக இருக்கிறாரே தவிர நிஜத்தில் நடிகர் மாரிமுத்துவின் குணம் யாருக்கும் வராது என்று பேசி இருக்கிறார். அதற்கு மேலே அவரால் பேச முடியாமல் வார்த்தைகள் திணற விட்டு விடுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரோடு அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பல பிரபலங்களும் தங்களுடைய வருத்தத்தையும் மாரிமுத்து பற்றி பல தகவல்களையும் தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications