மாரிமுத்து வேட்டியை மடித்து கட்டாத காரணம்! ஆனால் எனக்கு அதிக வில்லத்தனம்! வேலராமமூர்த்தி ஓப்பன் அப்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் வேல ராமமூர்த்தி அந்த சீரியலில் ஏற்கனவே நடித்த நடிகர் மாரிமுத்து குறித்தும் தற்போது சீரியலில் நடக்கும் கதை குறித்தும் சில தகவல்களை பேசி இருக்கிறார்.
அந்த வகையில் நடிகர் மாரிமுத்து தான் ஆதி குணசேகரன் கேரக்டரில் ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் திடீரென இறந்து போயிருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக வேல ரமமூர்த்தி நடிக்க வந்து பிறகு அதிகமாக வில்லத்தனம் அந்த கேரக்டரில் காட்டப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்பது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அந்த வகையில் தமிழ் சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத விதமாகத்தான் நடிகர் மாரி முத்துவின் மறைவு நிகழ்ந்தது. மாரிமுத்து பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தாலும் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் ஆதி குணசேகரன் கேரக்டரில் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. ஆனால் அந்தப் புகழை அதிக நாட்கள் அனுபவிக்காமல் அவர் திடீரென்று காலமானார்.
பிறகு அவரை போலவே பேச்சு வழக்கு மற்றும் உடல் மொழியில் இருக்கும் வேல ரமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே அவரை சீரியல் தரப்பினர் நடிக்க வைத்திருக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வேலராமமூர்த்திக்கு நடிப்பு இல்லை என்பது சிலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. வேலராம மூர்த்தி தன்னுடைய தனித்துவமான கேரக்டரில் நடித்தாலும் இதுவரைக்கும் பார்த்து வந்த ஆதி குணசேகரன் ஆக இவர் இப்போது இல்லை அதிகமாக வில்லத்தனம் காட்டுகிறார்.
அதுபோல இதுவரைக்கும் இதற்கு முன்பு நடித்த மாரிமுத்து வில்லனாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர் ஹீரோ போல தான் வலம் வந்தார். எந்த இடத்திலும் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு சண்டைக்கு நின்றது கிடையாது. தனக்கு காரியமாக வேண்டும் என்றால் அழுது நடிப்பார், கோபப்படவும் செய்வார். ஆனால் இப்போது உள்ள குணசேகரன் எதற்கும் வீராப்பாக விறைத்துக் கொண்டுதான் இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இது குறித்து சமீபத்தில் வேலராமமூர்த்தி பேட்டி ஒன்றில் சில தகவல்களை பேசி இருக்கிறார். அதில் கொம்பன் திரைப்படத்திலிருந்து தான் எனக்கும் மாரி முத்துவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் சேர்ந்து எட்டு படங்கள் ஒன்றாக நடித்திருக்கிறோம். கடைசியாக "வீராயி மக்கள்" என்ற படத்தில் நாங்கள் அண்ணன் தம்பி ஆகவே நடித்தோம். அந்த திரைப்படம் கூட சின்ன பட்ஜெட் படம் தான்.
அதற்காக நாங்கள் ஒரே ஓட்டலில் தங்கி ஒரே காரில் ஷூட்டிங் போயிட்டு வந்தோம். அதனால எங்களுக்குள் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. ஒருநாள் நான் காரைக்குடிக்கு ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தேன் அப்போ மாரிமுத்து இறந்ததாக தகவல் வந்தது அதைக் கேட்டு என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அன்னைக்கு முழுக்க எனக்கு ஷூட்டிங்கில் கவனம் செல்லவில்லை. அதுபோல எதிர்நீச்சல் சீரியலில் நான் ஒரு எபிசோட்டை கூட பார்த்ததே கிடையாது.
ஆனால் மாரிமுத்து என்கிட்ட பேசும்போதெல்லாம் எதிர்நீச்சல் சீரியல் பற்றி தான் பேசிக்கொண்டே இருப்பார். அதுபோல நான் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த போதும் முதல் காட்சியிலேயே என்னை வேட்டியை தூக்கிக்கொண்டு போலீஸ் நெஞ்சில் மிதிப்பது போல எடுத்தார்கள். ஆனால் மாரிமுத்து எப்பவுமே வேட்டியை தூக்கி கட்டி நடிக்க மாட்டார். அதற்கு காரணம் அவருடைய கால்கள் ஒல்லியாக இருப்பதால் அவர் காட்டாமல் இருந்திருக்கிறார்.
அதுபோல சூட்டிங் போகும் இடமெல்லாம் அங்கே செல்பி எடுக்க வருபவர்களிடம் குழந்தைகளாக இருந்தால் கூட மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியல் பாக்குறியா இல்லையா? என்று கேட்பார். எனக்கு இது கொஞ்சம் பில்டப்பா இருக்கே என்று தோனிச்சு. ஆனா அதுக்கு பிறகு தான் எதிர்நீச்சல் சீரியல் அவரை எந்த அளவிற்கு புகழின் உச்சத்துக்கு கொண்டு போனsது என்று எனக்கு தெரிந்தது.
ஆரம்பத்தில் இருந்து குணசேகரன் கேரக்டரை விட இப்போது எனக்கு அதிகமாக வில்லத்தனத்தை கொடுக்கிறார்கள். அது சீரியல் தரப்பினர் எடுக்கும் முடிவு. அதுபோல நான் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே எனக்கு எப்படி நடிக்கணும்னு தோணுதோ அது படி தான் நான் அந்த கேரக்டரில் நடிப்பேன்.
ஏற்கனவே நடித்த மாரிமுத்துவை போலவோ அல்லது வேறு யாரை போலவோ என்னால் நடிக்க முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டு தான் நடிக்க வந்தேன். அவர்களும் அதற்கு அப்போதே சம்மதம் சொல்லிவிட்டார்கள் அதனால் என்னால் ஃப்ரீயாக வேலை பார்க்க முடிகிறது. ஆனால் படங்களை விடவும் இந்த சீரியலில் நடிப்பது கஷ்டமாக இருக்கிறது என்று வேல ராமமூர்த்தி கூறியிருக்கிறார்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
"இந்தியாவின் எதிரி".. அஜர்பைஜானை குறிவைத்து அடித்த ஈரான்.. தீப்பற்றி எரியும் நாடு - அதிரடி -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி












Click it and Unblock the Notifications