எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண தேவையில்லை.. தலைக்கனமா? எதிர்நீச்சல் நந்தினி எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கேரக்டரில் நடிகை ஹரிப்பிரியா நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் பேட்டியில் தன்னுடைய கடந்த கால கஷ்டங்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதோடு தன்னுடைய வாழ்க்கையில் சிலர் அட்வைஸ் என்கிற பெயரில் அத்து மீறுவது குறித்து நடிகை ஹரிப்பிரியா அதில் பேசியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றனர். அதுவும் நந்தினி கேரக்டரை சொல்லவே வேண்டாம். இவருடைய டைமிங் காமெடி அதிகமான ரசிகர்களை கவர்ந்தது.
எதிர்நீச்சல் சீரியலில் குடும்ப பெண்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தாலும் அதில் எதிர்பார்க்காத விதமாக டைமிங் காமெடி செய்து கொண்டிருப்பது தான் நந்தினி உடைய கேரக்டரே. அதுதான் நடிகை ஹரிப்ரியாவின் நிஜ கேரக்டருமாம். சமீபத்தில் அவர் பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் எனக்கு அட்வைஸ் கொஞ்சம் கூட பிடிக்காது.
காரணம் நாம ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது நமக்கு உதவி செய்யாதவர்கள் ஒரு சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி எனக்கு அட்வைஸ் பண்ண தேவையில்லை. நான் எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டித்தான் இந்த தூரம் வந்திருக்கிறேன். இதை நான் தலைகனமாக சொல்லவில்லை.

என்னுடைய இத்தனை வருட பயணத்தில் நான் இங்கு சென்றால் இடிக்கும், அங்கு சென்றால் வலிக்கும் என்று படிப்படியாக கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். அதனால் இனி வரும் காலத்திலும் என்னை நானே பார்த்துக் கொள்வேன். எனக்கு எந்த அட்வைஸும் தேவையில்லை. அதுபோல நானும் யாருக்கும் அட்வைஸ் கொடுப்பது கிடையாது. எனக்கு கர்மா, நேரம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கிறது. அது எல்லாம் நம்மை சில நேரங்களில் சுழற்றி விடுகிறது.
நிறைய விஷயங்களில் நான் எடுத்த முயற்சிகள் கைவிட்டு இருக்கிறேன். நான் கஷ்டத்தில் இருக்கும் போது எனக்கு டார்வின் அண்ணன் என்பவர்தான் உறுதுணையாக இருந்தார். அவர் இங்கு தவறு செய்தவர்களே தைரியமாக வாழும் போது நீ வாழ்வதற்கென்ன என்று சொன்னார். இந்த வார்த்தைகள் தான் நான் இந்த துறையில் இத்தனை வருடங்களாக போராடி வருவதற்கான காரணம் என்று அந்த பேட்டியில் நடிகை பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications