நடிகர் விஜய்யுடன் எதிர்நீச்சல் இயக்குனருக்கு இப்படி ஒரு பந்தமா..? அடித்தளமே இளையராஜா தானா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
இவர் நடிகர் விஜய்க்காக ஒரு திரைப்பட கதை ரெடி பண்ணி இருந்தாராம்.
அது போல நடிகர் விஜய் உடன் உள்ள நெருக்கம் குறித்தும் பேட்டி ஒன்றில் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் தற்போது உச்சரிக்கப்படும் ஒரு பெயராகத்தான் எதிர்நீச்சல் சீரியல் இருக்கிறது. இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலின் கதையும் வேகம் எடுத்து இருக்கும் நிலையில் தற்போது இந்த சீரியல் வாரத்தில் 8 நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கு முன்பு இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியலும் ரசிகர்களின் மத்தியில் இது போன்ற ஒரு நல்ல வரவேற்பை பெற்று இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கோலங்கள் சீரியலின் வெற்றிக்கு பிறகு ஒரு சில சீரியல்களை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தாலும் அது பெரிய அளவில் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து சன் டிவியில் இவர் இப்போது இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் தன்னுடைய திரை துறை அனுபவங்கள், தான் கடந்து வந்த நிகழ்வு குறித்து அதில் பேசியிருந்தார்.
அப்போது கோலங்கள் சீரியலின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தன்னை கூப்பிட்டு பாராட்டியது குறித்தும் அதுபோல ரஜினிகாந்த் காக தான் கதை சொன்னேன் ஆனால் அந்த நேரத்தில் பதட்டத்தில் தான் நடிகைக்கு முக்கியத்துவம் இருக்கும் கதையாக சொன்னதால் அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது என்பது குறித்தும் பேட்டியில் ஏற்கனவே பேசி இருக்கிறார்.
அதுபோல திருச்செல்வம் மெட்டி ஒலி சீரியலை எடுத்த திருமுருகனிடம் உதவியாளராக இருந்தவர் தான். அதற்கு முன்பாகவே இவர் சினிமாவில் பைத்தியமாக இருந்திருக்கிறார். அதன் காரணமாகத்தான் இவர் சவுண்ட் இன்ஜினியராக வேலை செய்திருந்தாராம். அதுவும் இளையராஜாவிடமே திருச்செல்வம் பணியில் சேர்ந்து இருந்தாராம். இளையராஜா உடன் விஜய் நடித்த காதலுக்கு மரியாதை படத்தில் கூட இவர் பணி புரிந்திருக்கிறார்.
அந்த திரைப்படத்தில் சவுண்ட் இன்ஜினியராக இவர் வேலை செய்து கொண்டு இருந்தாராம்.ஆனால் அதைத் தொடர்ந்து திருச்செல்வம் சீரியல் இயக்குவதற்கு தொடங்கி இருந்தாலும் நடிகர் விஜய்க்காக ஒரு திரைப்பட கதையை கூறியிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியாமல் போய்விட்டது என்று இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications