எதிர்நீச்சல்: சூட்டிங் முடிந்ததும் ஹாஸ்பிடல் ஓடுவேன்..ஒரே இரவில் மாறிய வாழ்க்கை..ஜான்சி ராணி உருக்கம்
எதிர்நீச்சல் சீரியலில் சூட்டிங் முடிந்ததும் நான் ஹாஸ்பிடல் தான் போவேன் என்று ஜான்சி ராணி கூறி இருக்கிறார்.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் விஜே காயத்ரி நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததைப் பற்றி முதல் முறையாக உருக்கமாக காயத்ரி பேசியிருக்கிறார்.
ரசிகர்கள் தன்னை இந்த அளவிற்கு மதித்தாலும் தனக்கு ஏற்பட்ட சோகத்தை பற்றி நெகிழ்ச்சியோடு எதிர்நீச்சல் ஜான்சி ராணி கூறியிருக்கிறார்.

எதிர்நீச்சல் ஜான்சி ராணி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சமீப காலமாக சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைய தொடங்கிவிட்டனர். சில வாரங்களாக அறிமுகமாகி இருக்கும் ஜான்சி ராணிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறார்கள். இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் என்றால் அது குணசேகரன் கேரக்டராக இருக்கும். ஆனால் தற்போது குணசேகரனை ஆட்டி வைக்கும் கேரக்டராக ஜான்சி ராணி அறிமுகம் ஆகி இருக்கிறார்.

வாய்ப்பு கிடைத்தது
கரிகாலனின் அம்மாவாக நடித்து வரும் ஜான்சி ராணி கேரக்டரில் நடிக்கும் நடிகையின் பெயர் விஜே காயத்ரி தான். இவர் சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரியஸில் நடித்திருக்கிறார். அந்த சீரியஸ்க்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தான் இவரோடு பணிபுரியும் ஒரு பெண்ணால் திடீரென எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்காக இவருடைய புகைப்படத்தை அனுப்ப சொன்ன போது இவர் தன்னுடைய மார்டன் புகைப்படத்தை அனுப்பி இருக்கிறார். அப்போது அந்த புகைப்படத்தை பார்த்த இயக்குனர் இது செட்டாகாது என்று கூறிவிட்டாராம்.

எதிர்பாராத பாராட்டு
பிறகு தான் நடித்த அயலி திரைப்படத்தில் தன்னுடைய வீடியோக்களை அனுப்பி இருக்கிறார். அதை பார்த்ததும் அடுத்த நாள் காலையில் சூட்டிங்கில் கலந்து கொள்ள சொல்லி இருக்கிறார்கள். சூட்டிங் வந்தபோது அங்கே ஏற்கனவே நடித்து பிரபலமாக இருந்த மாரிமுத்து சத்திய பிரியா, பிரியதர்ஷினி என மொத்த குடும்பமும் இருக்கும்போது அங்கே அறிமுகமாகும் காட்சி இவருக்கு கிடைத்திருக்கிறது. அப்போது மாரிமுத்து பார்த்ததும் ஜான்சி ராணி மிரண்டு போயிருக்கிறார். இவர் இருக்கிறாரே நாம் எப்படி நடிப்போம் என்று பயந்தாராம். ஆனால் நடித்து முடித்ததும் முதல் ஆளாக மாரிமுத்து பாராட்டியதும் இவருக்கு ரொம்பவே சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

வாய் வெந்து போச்சு
அது மட்டுமில்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி வெற்றிலை போடும் கேரக்டராக நடித்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் முதல் நாள் அறிமுகம் ஆகும்போது குணசேகரனிடம் தன்னுடைய இடுப்பில் இருக்கும் வெற்றிலையை எடுத்துக் கொடுத்து பாக்கு வெற்றிலை மாற்றுவது போன்று சீன் இருக்கிறது என்று இயக்குனர் கூறினாராம். உடனே ஜான்சி ராணி அப்படி என்றால் நான் வெற்றிலை போட்டால் தானே சரியாக இருக்கும் வெற்றிலை போடுபவர்கள் தானே இடுப்பில் வெற்றிலையை வைத்திருப்பார்கள் என்று சொன்னதும், அதற்கு சரி உங்களுக்கு ஓகே என்றால் போட்டுக் கொள்ளுங்கள் என்று இயக்குனர் கூறிவிட்டாராம். அவரும் ஒரு ஆர்வத்தில் அந்த சீனில் நடிக்க என்று சொல்லிவிட்டு, வெற்றிலையை போட்ட பிறகு இவருடைய வாயெல்லாம் வெந்து போனதாம்.

அதுவும் மகிழ்ச்சிதானாம்
இதற்கு முன்பு வெற்றிலை போட்டு அனுபவம் இல்லாததால் வாய் வெந்து போய் சூட்டிங் முடிந்ததும் ஹாஸ்பிடலுக்கு தான் இவர் ஓடி இருக்கிறார். தொடர்ந்து இரண்டு நாட்கள் சூட்டிங் இருந்தால் அடுத்த வேலையாக ஜான்சி ராணி செல்வது மருத்துவமனையாக தான் இருக்கும் என்று தனக்கே உரிய கம்பீரமான குரலில் கூறியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் குணசேகரனை ஆட்டிப்படைத்து வைக்கும் கேரக்டராக எனக்கு இருப்பது என்னுடைய நடிப்பை வெளிக்காட்டுவதாக இருக்கிறது என்றுகூறியிருக்கிறார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications