இனி கிடைக்காத சந்தோஷம்.. கண்கலங்கி எதிர்நீச்சல் சத்யபிரியா வெளியிட்ட பதிவு..காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகை சத்யபிரியா விசாலாட்சி கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத பல புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதோடு இந்த சந்தோஷமெல்லாம் என்னுடைய வாழ்வில் இனி கிடைக்காதது என்று தன்னுடைய சோகங்களை வெளிக்காட்டி இருக்கிறார்.

Ethirneechal serial Sathya Priya has shared unforgettable photos in her life

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் ஆக இருந்து வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வன் பல வருடங்களுக்கு பிறகு இயக்கி வருகிறார். இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்கள்.

அந்த வகையில் இந்த சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் குணசேகரின் அம்மாக்காக நடிகை சத்யபிரியா நடித்து வருகிறார். நடிகை சத்யபிரியா ஏற்கனவே திருச்செல்வன் இயக்கத்தில் பல சீரியல் களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ஏழு வருடங்களாக கோலங்கள் சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல தற்போதும் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கேரக்டர் தத்ரூபமாக இருந்து வருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Ethirneechal serial Sathya Priya has shared unforgettable photos in her life

ஆரம்பத்தில் எதிர்நீச்சல் சீரியலில் இவருக்கு அப்பத்தா கேரக்டரில் தான் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அப்பத்தா கேரக்டர் இரண்டு மாதம் ஆகும் என்ற போது தான் இவருக்கு விசாலாட்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவும் எனக்கு பிடித்ததாக தான் இருக்கிறது என்றும் இந்த கேரக்டரில் சில நேரங்களில் பாசிட்டிவாகவும் சில நேரங்களில் நெகட்டிவ் ஆகவும் சில நேரங்களில் ஏமாளி ஆகவும் மாறும் மனநிலையில் இருப்பதால் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய திருமண நாள் அன்று தன்னுடைய கணவரோடு மாலையும் கழுத்துமாக இருக்கும் சந்தோஷமான புகைப்படங்கள் மற்றும் தனக்கு தன்னுடைய அம்மா அப்பா சாப்பாடு ஊட்டுவது போன்ற புகைப்படங்கள் அதைத்தொடர்ந்து தான் கை குழந்தையாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் பகிர்ந்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகையாகவும் முன்னாள் முதலமைச்சர் ஆகவும் இருந்த ஜெயலலிதாவோடும் தான் எடுத்த புகைப்படங்களையும், அதுபோல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையால் தான் அவார்ட் வாங்கிய புகைப்படங்களையும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.

Ethirneechal serial Sathya Priya has shared unforgettable photos in her life

மேலும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உடன் எடுத்த புகைப்படங்கள் என பல புகைப்படங்களை பகிர்ந்து " இனி இது எல்லாம் என்னுடைய வாழ்க்கையில் கிடைக்காத சந்தோஷங்கள். இதை பார்க்கும் போது எனக்கு ஏக்கமாக இருக்கிறது" என்று கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த பதிவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+