Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வயசு பொண்ணுங்களோட அம்மாக்களுக்கும் லவ் டார்ச்சர்... என்ன கொடுமை இது...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் வயசு பெண்களை பெத்த அம்மாவுக்கும் லவ் டார்ச்சர் குடுக்கறான் ஒருத்தன். பார்க்க பாவமா என்ன கொடுமை இதுன்னு நினைக்கற மாதிரி இருக்கு.

பவுர்ணமி முதல் தாரத்து பெண், பவானி ரெண்டாம் தரமான வசந்தியோட பெண்.வசந்தி ஒரு இக்கட்டான சூழலில்தான் பவுர்ணமியின் அப்பா சக்ரவர்த்திக்கு ரெண்டாவது மனைவியா ஆகறாங்க.

வசந்தி நல்ல வயசுல இருக்கும்போது கெட்டவன் ஒருத்தன் இவங்க மேல லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ்வுல இருக்கான். ஏற்கனவே கல்யாணம் செய்து மனைவியும் இருக்கா.

சக்ரவர்த்தியை

சக்ரவர்த்தியை

அவன்கிட்டே இருந்து தப்பிச்சு வந்துதான் சக்ரவர்த்தியை கல்யாணம் செய்துக்கறாங்க. வசந்தியின் அம்மா அப்பாவும் கெட்டவனுக்கு துணையாக இருக்க,அவங்களையும் வெறுத்துடறாங்க வசந்தி.

வசந்தி மட்டுமே

வசந்தி மட்டுமே

வசந்தியை காணாம அவனுக்கு பைத்தியம் பிடிச்சுருது. எல்லாத்தையும் மறந்து இருந்தவனுக்கு, வைத்தியம் பார்த்ததில் வசந்தி மட்டுமே நினைவில் இருக்கா.

காதல் கூடுது

காதல் கூடுது

இவனுக்கு பக்கபலமா இருக்க இவனின் அம்மா வசந்தி எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சு, பையன்கிட்ட சொல்லிடறாங்க. ரொம்ப வருஷத்துக்கு பிறகு வசந்தியை பார்த்த அவனுக்கு இன்னும் வசந்தி மேல காதல் கூடுது.

உன் புருஷனை

உன் புருஷனை

ஒரு நாள் தூங்கிகிட்டு இருந்தபோது என்னுடன் வந்துரு.. நீ இல்லாம என்னால வாழ முடியாதுன்னு சொல்றான். இல்லேன்னு சொன்னா இப்பவே உன் புருஷனை கொன்னுருவேன்னு சொல்லி மிரட்டிட்டு போறான்.

நடு ஹாலில்

நடு ஹாலில்

பிறகு ஒரு நாள் வீட்டின் நடு ஹாலில் வந்து அவளை இழுத்துட்டு போக கையை பிடிக்கறான். காப்பாத்த யாரும் இல்லாம பவுர்ணமி பவுர்ணமின்னு கத்தறாங்க. பாத் ரூமிலிருந்து அவளுக்கு காதில் விழலை.

வருவோம் நாளைக்கு

வருவோம் நாளைக்கு

அதுக்குள்ள நாளைக்கு வருவோம்.. நீ நல்ல முடிவா எடுத்து எங்களோட வரணும்னு சொல்லிட்டு தன அம்மாவை அழைச்சுக்கிட்டு போயிடறான். வசந்தி அழுதுகிட்டே இருக்க, பவுர்ணமி வந்து அம்மா அழறதைப் பார்க்கறா.

வருவாங்களே நாளைக்கு

வருவாங்களே நாளைக்கு

என்னாச்சும்மான்னு பதறி போயி அம்மாவை கேட்க, அம்மா ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டு மேல போயிடறாங்க. நாளைக்கு வருவாங்களே என்ன பண்றதுன்னு அதை நினைச்சு அழுதுகிட்டு இருக்காங்க.

கேமிராவில்

கேமிராவில்

பவுர்ணமி என்ன கேட்டும் அவங்க சொல்லலை.. யாராவது வீட்டுக்கு வந்தங்களான்னு வேலைக்காரங்க கிட்ட விசாரித்தால், யாருக்கும் தெரியலை. பவுர்ணமி சிசிடிவி கேமிராவில் பார்த்து நடந்ததை தெரிஞ்சுக்கறா.ஆனாலும் முழுசா என்ன நடந்ததுன்னு தெரியலை.

பெண்களுக்கு

பெண்களுக்கு

எப்படியாவது அம்மாவை காப்பாத்தணும்னு நினைக்கறா பவுர்ணமி. இதுல என்னன்னா எந்த வயசானாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு சொல்ல வர்றதுதான் விஷயமே...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+