சிவாஜி அப்படி கேட்டதுமே, மனம் உருகிய ரஜினி.. நடிகர் திலகம் மீது சூப்பர் ஸ்டாருக்கு இப்படியொரு பாசமா?
சென்னை: தான் ஒரு செவாலியே சிவாஜியாகவே இருந்தாலும், தன்னுடைய குடும்பத்தில், திரைப்பட வெளிச்சம் வராமல் பார்த்துக் கொண்டார்.. குடும்பம் வேறு, சினிமா வேறு என்பதில் கடைசி தெளிவுடனும், உறுதியுடனும் இருந்தவர் சிவாஜி கணேசன் என்று கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன். அத்துடன், சிவாஜி குடும்பத்துடன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் அளவுகடந்த பற்று வைத்திருப்பவர்கள் என்றும் கூறியிருக்கிறார்.
Behindcinema என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த தமிழா தமிழா பாண்டியன், "ஆரம்பத்திலிருந்தே சினிமா நடிகைகளை தங்கள் மகன்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என்பதில் சிவாஜி கணேசன் உறுதியாக இருந்தார். ஆனால், 1980-ல், சிவாஜி கணேசன் வீட்டில் ஒரு சண்டை நடந்தது..

மூத்த மகன் ராம்குமார், ஒரு நடிகையை திருமணம் செய்வதாக சொல்லவும், சிவாஜி கோபப்பட்டு, துப்பாக்கியை எடுத்து சுடுவதாக பத்திரிகைகளில் செய்திகள் அப்போது வெளியானது.. அதேபோன்ற ஒருநிலைமை 1992ம் ஆண்டிலும் வந்தது.. ஆனால், அந்த நடிகையுடன் நடிக்கக்கூடாது என்று சிவாஜி கட்டளையிட்டார்.. காரணம், நடிப்பு வேறு, குடும்பம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர்..
சிவாஜியின் பிரின்சிபிள்
குடும்பத்துக்குள்ளே நடிப்பு வந்துரக்கூடாது.. நடிப்புக்குள்ளே குடும்பம் போயிரக்கூடாது.. கோடம்பாக்கம் ஸ்டுடியோவை, கோடம்பாக்கத்திலேயே விட்டுட்டு வீட்டுக்கு வந்துடணும். வீட்டுக்குள்ளே கோடம்பாக்கம் வரக்கூடாது என்பதுதான் சிவாஜியின் பாலிஸி... தான் ஒரு செவாலியே சிவாஜியாகவே இருந்தாலும், தன்னுடைய குடும்பத்தில், திரைப்பட வெளிச்சம் வராமல் பார்த்துக் கொண்டார்...
அதேபோல, சிவாஜி மறைவுக்கு பிறகு, அந்த குடும்பம் கடன் தொல்லையில் சிக்கியது. சிவாஜி புரொடக்ஷன்ல நிறைய இழப்பு, வந்தது.. எனவே, இதனை ரஜினியிடம் பிரபு புலம்பியிருக்கிறார். "கவலைப்படாதே, உன் அப்பா எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்.. உனக்கு எவ்வளவு வேணும்? கடன் அடைக்க 200 கோடி போதுமா? என்று கேட்டு அப்படி ரஜினியால் கொடுக்கப்பட்ட கால்ஷீட்தான் சந்திரமுகி.
சிவாஜி மீது ரஜினிகாந்த் மதிப்பு
அப்படி உதவி சிவாஜி புரொடக்ஷனில் கிடைத்த லாபத்தை வைத்துதான், சிவாஜி குடும்பத்துக்கு ஏற்பட்ட கடனை அடைக்கப்பட்டது. அந்தவகையில், சொத்துக்களை எல்லாம் மீட்டு தந்தவர் ரஜினிகாந்த்தான்.
"உச்சநடிகராக உன் அப்பா இருந்தபோது, எந்த ஈகோவும் பார்க்காமல், என்னை கோடம்பாக்கம் செட்டில், வாஞ்சையோடு என்னை தடவிக்கொடுப்பார்" என்று பிரபுவிடம் சொன்னார் ரஜினி.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது, சிவாஜியை பாரக்க போனாராம் ரஜினி. அப்போது, "டேய், நான் இறந்தால், என் ஊர்வலத்துல வருவியாடா" என்றாராம்.
அளவுகடந்த பற்று
உடனே ரஜினி, "அப்பா, அப்படியெல்லாம் சொல்லாதீங்க, நீங்கள் 100 வயசு வரை இருப்பீங்க" என்றாராம் ரஜினி. அதற்கு சிவாஜி கணேசன், "இல்லடா, நீ இமயமலை, சிங்கப்பூர் அமெரிக்கான்னு போயிடுவே.. என் சவ ஊர்வலத்துல கலந்துக்கணும்" என்று அன்பாக கட்டளையிட்டார்.. அதனால்தான், சிவாஜி இறந்த ஊர்வலத்தில், கடைசிவரை சென்றார் ரஜினி.
சிவாஜி வீட்டு கடனை ரஜினி அடைத்தற்கான காரணம், சிவாஜி தன்னை முழுமையாக அங்கீகரித்ததுதான். சிவாஜி நினைத்திருந்தால், ரஜினியெல்லாம் நடிக்க லாயக்கில்லை என்று எப்போதோ சொல்லியிருக்கலாம்.. ரஜினி மட்டுமல்ல, கமல், அஜித், விஜய் என யாராக இருந்தாலும், சிவாஜி குடும்பதின் மீது அளவுகடந்த மரியாதை, பற்றினை இன்றும் வைத்திருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications