பிரியங்காவுக்கு என்ன ஆச்சு... பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த திடீர் குழப்பம்
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் பிரியங்காவை காணாத ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவரைப்பற்றி அதிகமாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரியங்காவை மட்டும் காணவில்லையே என்பதுதான் பலருடைய குழப்பமாக இருந்து வருகிறது.

ஜெயிக்கப்போவது யாரு? ?
தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இறுதிகட்டத்தில் பைனல் லிஸ்டாக தேர்வாகி இருக்கும் போட்டியாளர்களில் ஒருவராக பிரியங்கா இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியின் பிரபலமாக இருப்பதால் இவர் தான் இந்த நிகழ்ச்சியில் ஜெயிப்பாரா?? என்று பலர் குழப்பத்தோடு கேள்விகளை ஏற்படுகின்றனர். ஒரு பக்கம் பிரியங்கா ஜெயிக்க வேண்டும் என்று ஆதரவு கூடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் ராஜூ ஜெயிக்க வேண்டும் என்றும் ஆதரவு அதிகரித்து வருகிறது.

குழப்பமான சீசன்
இதற்கு முந்தைய சீசன்களில் ஆரம்பத்திலிருந்தே குறிப்பிட்ட போட்டியாளர் தான் ஜெயிப்பார்கள் என்று ரசிகர்கள் கருத்து கணிப்பு செய்து வருவார்கள். அதுபோலவே கடைசியில் நடைபெற்று விடும். அது போல இந்த சீசனிலும் நடக்குமா?? அல்லது கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றம் நிகழுமா?? என்பது பலருடைய குழப்பமான கேள்வியாக இருந்துவருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் பலருக்கும் ஜாலியான கேரக்டர் ஆகவும் பல நேரங்களில் கடுப்பேற்றும் கேரக்டராகவும் இருந்து வரும் பிரியங்கா ஜெயிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கூறிக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு தரப்பினர் அவர் ஜெயிக்க கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

அமோகமான ரசிகர்களின் ஆதரவு
என்னதான் நெட்டிசன்கள் பிரியங்காவை சமூக வலைத்தளத்தில் கலாய்த்துக் கொண்டு இருந்தாலும், அவர் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் இருந்து தப்பித்து கொண்டுதான் இருக்கிறார். அதுவும் வாக்கு எண்ணிக்கையில் அதிகளவில் ஓட்டுகள் பெற்று முதல் இடத்தில் சேவ் ஆகி விடுகிறார். இது இவருடைய வெற்றியாகவே அவருடைய ரசிகர்கள் பார்த்து வருகின்றனர் .இந்த நிலையில் இன்றைய ப்ரமோ பிரியங்காவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருந்து வருகிறது.
Recommended Video

பிரியங்காவை காணவில்லையே
இன்றைய முதல் ப்ரமோவில் தாமரை செல்வி மீண்டும் இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். அப்போது ஜாலியாக அவரை வரவேற்ற பிரியங்கா அதற்கு அடுத்து வந்த இரண்டு ப்ரமோகளிலும் காணப்படவில்லை. இரண்டாவது ப்ரமோவில் அக்ஷரா மற்றும் வருண் புதியதாக வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் செந்தூரப்பூவே சீரியல் அணியினரும், ஈரமான ரோஜாவே இரண்டாவது பாகத்தில் சீரியல் அணியினரும் சிறப்பு விருந்தினர்களாக வந்துள்ளனர். அப்போது அங்கே பிரியங்காவை மட்டும் காணவில்லை. அவரை தேடிய பல ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளை பரப்பி வருகின்றனர். பிரியங்காவுக்கு என்ன ஆச்சு...என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்துவருகிறது. ஒருவேளை பிரியங்கா நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டாரா??அல்லது அவருக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையா??என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications