Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வனிதா விஜயகுமார் என்ன இப்படி பேசுறாங்க! வருத்தப்பட்ட கங்கை அமரன்! பிரபலம் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவுக்கு மருமகளாகியிருப்பேன் என வனிதா விஜயகுமார் கூறியிருப்பது வருத்தம் அளிக்கிறது என கங்கை அமரன் வேதனைப்பட்டதாக தேனி கண்ணன் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் நடப்பதற்கான ஒரு சுவடு கூட இல்லாத போது அந்த பெண் ஏன் அப்படி கூறினார் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ilayaraja vanitha

இதுகுறித்து வாவ் தமிழாவுக்கு தேனி கண்ணன் கூறியிருப்பதாவது: வனிதா இளையராஜா வீட்டுக்கு நான் மருமகளாக போக வேண்டியவள் என சொன்னது. இது சம்மந்தமா ஒருவேளை இருக்குமோ என நிறைய பேர் கிட்ட விசாரித்தேன். அதுக்கான ஒரு சுவடு கூட இல்லை.

என்ன இப்படி இந்த பொண்ணு பேசிகிட்டு இருக்குனு எல்லாரும் சிரிக்கிறாங்க. கார்த்திக் ராஜாவே இளையராஜா சாருடைய ஒரு சின்ன வடிவம்தான். அவர் அதிகமாக யாரிடமும் பேசமாட்டார். அதுவும் பெண்கள் இருந்தால் அவர் தனியாக போய்விடுவார்.

இதுகுறித்து கங்கை அமரன் கிட்ட பேசும் போது என்ன இந்த பொண்ணு இப்படி பேசிக்கிட்டு இருக்கு என அவர் வருத்தப்பட்டார். பொது வெளியில் இப்படி பேசக் கூடாது. ராஜா சார் அவருடைய பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தினால் வழக்கு போடுகிறார் என தெரிந்தும் அந்த பாடலை வனிதா தனது படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் அவருக்கு வேறு ஒரு எண்ணம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்.

தனது படம் குறித்து வனிதா பேசலாம். பிரச்சினை என்றால் அதை எப்படி தீர்ப்பது என்பதை யோசிக்கலாம். ஆனால் நன்றாக இருக்கும் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. கார்த்திக் ராஜாவுக்கு திருமணமாகி அவரே தற்போது இசையமைக்க வந்துவிட்டார். இந்த சூழலில் இப்படியெல்லாம் வனிதா சொல்வது தவறு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்துள்ள "மிஸஸ் அண்ட் மிஸ்டர்" என்ற படத்தில், இளையராஜாவின் இசையில் உருவான "ராத்திரி சிவராத்திரி" (படம்: ஷிவானி) என்ற பாடலை அவரது அனுமதியின்றிப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இளையராஜா தரப்பு: இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். தனது அனுமதியின்றி தனது பாடலைப் பயன்படுத்துவது காப்புரிமை மீறல் என்று அவர் வாதிட்டுள்ளார்.

வனிதா தரப்பு: வனிதா விஜயகுமார் இந்த விவகாரம் குறித்துப் பதிலளிக்கும்போது, இளையராஜா குடும்பத்தினருடன் தனக்கு இருந்த நெருங்கிய உறவு குறித்துப் பேசியுள்ளார். இது ஒரு சிறிய விஷயம் என்றும், "இளையராஜா என் அப்பாவைப் போன்றவர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா வீட்டு மருமகளாகும் வாய்ப்பு தனக்கு இருந்தது குறித்து வனிதா விஜயகுமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+