CWCயில் இருந்து ஜி.பி முத்து விலகல்..?அவரே கொடுத்த விளக்கம்..கடைசியில் இப்படி சொல்லிட்டாரே
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து விலக போகிறார் என்ற செய்தி சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது.
அது குறித்து ஜி.பி முத்து தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
விரைவில் மீண்டும் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் வேண்டுகோள் வைத்திருக்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. அந்த வகையில் ஒன்றுதான் தற்போது ஜி பி முத்து திடீரென்று இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போகிறார் என்ற தகவல்களும் பரவி வருகிறது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிபி முத்து புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியானது. அதற்குப் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இனி தொடர்வாரா இல்லையா என்பது பற்றி முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற சூட்டிங்கு ஜிபி முத்து கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ச் ஆகி விட்டாலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்த மாத இறுதியில் சூட்டிங்கில் என்னை கூப்பிட்டால் நான் கலந்து கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே அதிகமாக ரெஸ்ட் இல்லாமல் நான் ஓடிக்கொண்டே இருந்ததால் தான் என்னுடைய உடல்நிலை பாதிப்பாகிவிட்டது. அதனால் இனி அப்படி ஒரு தப்பை செய்ய மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்,

அதோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு ரொம்பவே பிடித்தது. அங்கே நாங்கள் ஜாலியாக பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்ப்போம். சூட்டிங் ஸ்பாட்டில் கூட மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். ஆனால் ரெஸ்ட் இல்லாமல் அடிக்கடி சுத்திக்கொண்டே இருப்பதால் என்னுடைய உடல் சோர்வாகி விட்டது. அந்த நிலையில் தான் மருத்துவமனையில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த வீடியோவிற்க்கு சீக்கிரமா உடல் நிலையை தேத்தி விட்டு ஓடி வாங்க தலைவரே உங்களுடைய ரீ என்ட்ரி பார்க்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதுபோல இன்னும் ஒரு சிலர் வழக்கம் போல டபுள் மீனிங் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications