சலங்கை ஒலி படம் பார்த்தீர்களா? அது நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர்தானே?
சென்னை: சலங்கை ஒலி படம் பார்த்தீர்களா, அதில் கமலை பார்க்க ஷைலஜாவுடன் வருவது நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர் மோகனா என்ற சந்தேகம் அனைவருக்கும் உள்ளது.
இதுகுறித்து செல்வன் அன்பு தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பழைய கருப்பு வெள்ளை படத்தில் சிவாஜியையும், கள்ளபார்ட் நடராஜனையும் பார்க்கும் போது ஒரே ஆளோன்னு தோணும். ஓமக்குச்சி நரசிம்மனையும், தயிர்வடை தேசிகனையும் குழப்பிக் கொண்டது உண்டு.

ரேடியோவில் திரைச் சித்திரம் கேட்கும் போது லதாவின் குரலும், ஸ்ரீப்ரியாவின் குரலும் ஒன்று போலவே தோன்றும். ராஜேந்திரகுமார் எழுத்தாளரும், ஐ.வி.சசி என்கிற இயக்குனரும் ஒரு ஆளோன்னு தோணும்.
வேறொரு விஷயம் ரொம்ப நாளாகவே நிறைய பேரு ஒரு குழப்பத்தில் எழுதுவதைப் பார்க்க முடிகிறது.
சலங்கை ஒலி படத்தில் S.P.ஷைலஜா ஆடிய முறை பற்றி கமல் எழுதி விடுவார். அப்போது ஷைலஜா கமலை கேட்க பத்திரிக்கை அலுவலகத்துக்கு வருவார். அப்போது அவருடன் ஷைலஜாவின் காதலனும் வருவார். கமல் கூட கதகளி, குச்சிபுடி என பல வித நடன விதங்களை ஆடிக்காட்டி முடிப்பார்.
இந்தக் காட்சி படத்தில் அழகாக இருக்கும். இந்தக் காட்சியில் ஷைலஜாவோடு வருவது நடிகை லக்ஷ்மியின் முன்னாள் கணவர் மோகன் என்றே பலரும் எழுதுகின்றனர்.
மோகன் படத்தில் இருக்கிறார் என்பது உண்மை. கமலையும், ஜெயப்ரதாவையும் சேர்த்து வைத்து விட்டு கனடா போகப்போவதாக சொல்கிறாரே அவர் தான் மோகன்.
ஆனால் இரு கதாபாத்திரங்களும் உருவ ஒற்றுமை ஒன்று போல் இருப்பதால் இவர் தான் மோகன் என நினைத்துக் கொள்கின்றனர். மோகன் படத்திலும் நாயகியை பிரிந்து செல்வது தான் அவருக்கு எழுதிவைத்த தலையெழுத்து போல... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications