Ilaiyaraaja: “ஸ்டேடியம் போதாது” என நெகிழ்ந்த இளையராஜா! இசைஞானிக்கு தமிழக அரசின் கெளரவம்!
சென்னை: இசைஞானி இளையராஜாவைப் பத்திப் பேசவே ஒரு தனி சந்தோஷம் வரும். இசைக்கு அரசன்னு எதுக்கு அவரைச் சொல்றாங்கன்னா, அவருடைய பாட்டுக்கு மொழி ஒரு தடையே கிடையாது. எந்த மனநிலையில் இருந்தாலும், அதுக்கு ஒரு பாட்டு இளையராஜா இசைல இருக்கும். காதலா, சோகமா, கொண்டாட்டமானு எதுவானாலும் சரி, ஒரு இசை ரசிகனோட மனசுல ராஜா சாம்ராஜ்யம் தான்!
லண்டன்ல அவர் வெற்றிகரமா சிம்பொனி நிகழ்ச்சியை நடத்தி முடித்தது, நம்ம எல்லோருக்கும் பெருமையான விஷயம். இதற்க்கு பிறகு, தமிழக அரசு சார்பில் அவருக்கு ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுவும், ஒரு கலைஞனுக்காக அரசு விழா நடத்துறது இதுதான் முதல்முறைனு சொல்றாங்க. அது, ராஜாவோட 50 ஆண்டு கால இசைப் பயணத்துக்குக் கிடைத்த ஒரு பெரிய கெளரவம்.

இந்த விழா, முதலில் ஜூன் 2-ஆம் தேதி நடக்கறதா இருந்தது. ஆனா, சில காரணங்களால தள்ளிப்போனது. இப்போ, செப்டம்பர் 13-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்குல நடக்கப்போகுது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்றாங்க. வெளிநாட்டு இசைக்கலைஞர்களோட சேர்ந்து இளையராஜா கச்சேரி நடத்தப் போறது, ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்துதான்!
இந்த விழா பத்தி இளையராஜா பேசும்போது, "உங்களுக்கெல்லாம் எவ்வளவு சந்தோஷம் இருக்கோ, அதே அளவு எனக்கும் இருக்கு. விழால மக்கள் கலந்துக்க, அந்த ஸ்டேடியமே பத்தாது. ஏன்னா, மக்கள் அவ்வளவு ஆவலோட இருக்காங்க"ன்னு நெகிழ்ந்து பேசியிருக்கார். ரசிகர்களைப் புரிஞ்சுகிட்டு பேசுற ஒரு கலைஞன் தான், இந்த அளவுக்குப் புகழ் வெளிச்சத்துல இருப்பாங்க. இந்தப் பாராட்டு, இளையராஜாவோட இசைக்குக் கிடைச்ச அங்கீகாரம் மட்டும் இல்ல, தமிழ் ரசிகர்களோட சார்பாகவும் அவருக்குக் கிடைச்ச ஒரு பெரிய அன்பு!
அவர் வெறும் இசையமைப்பாளர் அல்ல, அவர் ஒரு உணர்வுகளின் சிற்பி. நமது மகிழ்ச்சி, சோகம், காதல், பிரிவு, கொண்டாட்டம் என அனைத்து உணர்வுகளுக்கும் ஒரு இசை கோடு போட்டவர். நம் மனதின் மொழியை இசையாக மாற்றியவர். அவர் இசைஞானி இளையராஜா. ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக, அவரது இசை இன்றும் நம் மனங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவரது 50 ஆண்டு கால இசைப் பயணத்தைக் கொண்டாடும் விதமாக, தமிழக அரசு அவருக்கு ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. இது ஒரு அரசால் ஒரு கலைஞனுக்குக் கிடைத்த உச்சபட்ச அங்கீகாரம்!
யார் இந்த இசைஞானி
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் ஞானதேசிகன் என்ற பெயரில் பிறந்தவர்தான் இளையராஜா. வறுமை, பசி, கனவு எனப் பல தடைகளைத் தாண்டித்தான் அவரது பயணம் தொடங்கியது. தன் சகோதரர் பாவலர் வரதராஜன் குழுவில் பறை இசைத்து, கிராமங்களில் நாடகங்களுக்குப் பாடி, தன் கலையை மெருகேற்றினார். அன்று அவர் கண்ட வறுமையும், அனுபவித்த வலிகளும் தான், அவர் இசையில் ஒரு ஆழமான உணர்ச்சியை வெளிப்படுத்தக் காரணமாக இருந்தன.
1976-ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே மயிலே மயிலே என்ற கிராமியப் பாடல், அன்றைய சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய இசை அனுபவத்தைக் கொடுத்தது. இதுதான் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தின் தொடக்கம்!
ஒரு ராஜாவின் சிம்மாசனம்
இளையராஜா வெறும் பாடல்களை மட்டுமன்றி, வாழ்க்கையையும் இசையாக மாற்றியவர். அவரது பாடல்கள் ஏன் இன்றும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றன. கிராமங்களில் ஒலித்துக்கொண்டிருந்த நாட்டார் இசையை, பட்டி தொட்டியெங்கும் கொண்டு சென்றார். மஞ்சள் பூசும், செண்பகமே செண்பகமே, ராசாவே உன்ன நம்பி போன்ற பாடல்கள் கிராமங்களின் மண்ணின் வாசனையையும், மக்களின் இதயத் துடிப்பையும் திரையில் கொண்டு வந்தன.
இப்படிப்பட்ட ஒரு மகத்தான கலைஞனுக்கு தமிழக அரசு விழா எடுப்பது, காலம் கடந்த ஒரு கொண்டாட்டம்தான். இந்த விழா, இளையராஜாவின் இசைக்குக் கிடைத்த மரியாதை. இதில் கலந்துகொள்ளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் போன்றோர், ராஜாவின் இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications