திருவண்ணாமலையில் தட்டின் கீழ் மறைத்து ஐயருக்கு இளையராஜா தந்த பரிசு பொருள்? இதை கூட விட மாட்டீங்களா?
திருவண்ணாமலை: பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீம் இன்று மாலை அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்நிலையில், இந்த கோயிலுக்கு இசைஞானி இளையராஜா வந்திருந்து பிரார்த்தனை செய்துவிட்டு சென்றார். அந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளையராஜாவுக்கும் திருவண்ணாமலை கோயிலுக்கும் நெருங்கிய பந்தம், உறவு உள்ளது.. 1980களிலேயே "இசைஞர் இளையராஜா" என்ற பெயரில் கேசட்டுகளை வெளியிட்டு, அதன் மூலம், கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாடல்கள், இசை என எல்லாவற்றையும் கொண்டுவந்தார். இதன் மூலம், கிரிவலம் செல்லும் வழியை பக்தர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்..

அந்த பாடல்கள், கிரிவலத்தின் அமைதியையும் அதன் ஆன்மிக ஆழத்தையும் உலகம் முழுவதும் பக்தர்களிடம் சென்றடைந்தது.
அருணாசலேஸ்வரர் மீதான பக்தி
தன்னுடைய பல பாடல்களில் திருவண்ணாமலை முருகப் பெருமானையும், அருணாசலேஸ்வரரின் பெருமையையும் பாடியுள்ளார்.. அதுமட்டுமல்ல, கிரிவலம் செல்லும் பக்தர்களின் அனுபவங்களைக் கேட்டு, அதற்கென்று தனியாகவே ஒரு ஆல்பத்தையும் உருவாக்கினார்.
அன்றைய காலத்திலிருந்தே திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டவர் இளையராஜா.. இதற்கு பிறகுதான், கிரிவலம் சினிமா வட்டாரத்தில் மிகுந்த பிரபலமாகியது... ஏராளமானோர் கிரிவலத்துக்கு செல்வதால், பக்தர்களுக்காக சாலைகள், நடைபாதைகள் மேம்பட பல்வேறு வசதிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து தந்துள்ளார் இளையராஜா..
திருவண்ணாமலை கோயில்
விடுதிகள், உணவு வழங்கும் அமைப்புகள், தண்ணீர் வசதிகள், பொதுக்கட்டிடங்கள் போன்றவற்றை உருவாக்கவும் மேம்படுத்தவும் தன்னுடைய பங்களிப்பை செய்தார்.. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு குறைந்த செலவில் பாதுகாப்பான வசதியும், மதிய சாப்பாடும் கிடைக்க பல அறக்கட்டளைகளுடன் இணைந்து செயல்பட்டார்...
அதேபோல தன்னுடைய தனிப்பட்ட தருணங்களிலும் திருவண்ணாமலைக்கு அடிக்கடி வந்து செல்வார் இளையராஜா.. ஒருமுறை தனக்கு மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை முடிந்ததுமே, நேராக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்தார்.
மனோஜ் பாரதி - மோட்ச தீபம்
அதேபோல எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ஆத்மசாந்திக்காக மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தார்.. நடிகர் மனோஜ் பாரதி மறைந்தபிறகும் இப்படித்தான் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றினார் இளையராஜா. அந்தவகையில், இசைக்கும், பக்திக்கும், தியானத்துக்கும் பாலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் இளையராஜா..
நேற்றைய தினமும் திருவண்ணாமலை கோயிலுக்கு வந்து சென்றார் இளையராஜா.. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, இசைஞானி இளையராஜா சுவாமி தரிசனம் செய்தார்.. திருவண்ணாமலை கோயிலுக்கு வந்த இளையராஜா, முதலில் சம்மந்த விநாயகர் சந்நிதியில் வழிபட்டார்..
தட்டின் கீழே தரப்பட்ட பொருள்
பிறகு உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தார்.. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிவாச்சாரியாகள் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கினார்கள். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன..
இந்நிலையில், கோயில் நிர்வாகத்தினர் இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியிருக்கிறது. அதில், தட்டில் பூ, பழங்களை வைத்து ஐயரிடம் தரும்போது, ஏதோ ஒன்றை ஐயர் கையில் இளையராஜா கொடுப்பது போன்றிருப்பதை சுட்டிக்காட்டி இந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.
தட்சணை தந்தாரா
உடனே இதைப்பார்த்த நெட்டிசன்கள், ஐயருக்கு இளையராஜா என்ன தந்தார்? என்று சந்தேகங்களை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.. ஒருசிலர் அது தட்சணை என்று பதிவிட்டுள்ளனர்.. மேலும் சிலர் அது லஞ்சம் என்று பதிவிட்டுள்ளனர்..
மேலும் சிலர், "எல்லா விஷயத்தையும் குறை கண்டுபிடிப்பதுதான் உங்களுக்கு வேலையா? ஐயருக்கு தட்சணை தருவதில்கூட குறை கண்டுபிடிப்பீர்களா?" என்று கமெண்ட் செய்தவர்களையே விமர்சித்து வருகிறார்கள்.
வழக்கமாக இளையராஜா என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அது வைரலாகிவிடுவதை போல, இளையராஜாவின் இந்த திருவண்ணாமலை கோயில் வீடியோவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications