For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இமான் அண்ணாச்சியின் புது முயற்சி.. இது லிஸ்டிலேயே இல்லையே... வாழ்த்தும் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் விட்டு வெளியே வந்த இமான் அண்ணாச்சி செய்த செயல் தற்போது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

இமான் அண்ணாச்சி குழந்தைகளுக்காக செய்த செயல் தற்போது ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

குளுக்கோஸ் ஏற்ற ரூமுக்குள்.. பெண்ணை அழைத்து சென்ற இளைஞர்.. திடீரென ஒரு அலறல்.. ஸ்தம்பித்த தர்மபுரிகுளுக்கோஸ் ஏற்ற ரூமுக்குள்.. பெண்ணை அழைத்து சென்ற இளைஞர்.. திடீரென ஒரு அலறல்.. ஸ்தம்பித்த தர்மபுரி

இமான் அண்ணாச்சியின் வியக்க வைக்கும் செயல்

இமான் அண்ணாச்சியின் வியக்க வைக்கும் செயல்

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இமான் அண்ணாச்சி அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகு செய்த செயல் ரசிகர்களை ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது இவர் பெரியவர்களையும், குழந்தையாக மாற்றி கொண்டிருந்தது போல தற்போது குழந்தைகளோடு குழந்தையாக இவர் மாறி இருக்கும் அழகை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

குழந்தைகளின் மீது தனி அன்பு

குழந்தைகளின் மீது தனி அன்பு

ஏற்கனவே குழந்தைகளோடு இவருக்கு அதிக அளவில் நெருக்கம் இருக்கும் நிலையில் தற்போது இவர் செய்திருக்கும் செயல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சியின் மூலமாக எவ்வளவு துறுதுறுவென இருக்கும் குழந்தைகளிடமும் குழந்தையாக மாறி கேள்விகளை கேட்டு அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவரும் ஒரு சவாலான வேலையை ஆரம்பத்தில் இமான் அண்ணாச்சி பார்த்து இருப்பதாலோ என்னவோ இவருக்கு குழந்தைகளின் மீது இவ்வளவு அன்பா என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

கண்கலங்க வைத்த வெளியேற்றம்

கண்கலங்க வைத்த வெளியேற்றம்

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் இவர் கலந்து கொள்கிறார் என்ற செய்தி தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் இவர் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டால் அவருடைய பெயர் கெட்டுப் போய்விடும் என்று ஆரம்பத்தில் கூறி வந்தனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இவருடைய காமெடி மற்றும் விளையாட்டு ரசிகர்களை கவர்ந்தது. ஒரு சில நேரங்களில் இவர் கருத்து சொல்கிறேன் என்று பேசுவது ஒரு சில ரசிகர்களை வெறுப்படையச் செய்திருந்தாலும், இவர் 80 நாட்களுக்கும் மேலாக இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிலைத்திருந்தார். இவருடைய வெளியேற்றம் போட்டியாளர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்து இருந்தது.

குழந்தைகளோடு மகிழ்ச்சி

குழந்தைகளோடு மகிழ்ச்சி

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இமான் அண்ணாச்சியும் அப்படிதான் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் இணைந்த கைகள் டிரஸ்ட் மூலமாக ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு சாப்பாடு வழங்கி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இவருடைய வருகையால் குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அந்த தருணத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களை கூறி மேலும் இது போல செயல்களை செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

English summary
The action of Iman Annachi, who left the Bigg Boss show, is now making the fans celebrate.The work done by Iman Annachi for children is currently receiving congratulations among the fans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X