கடைசியில நிலா வளர்ப்பு பொண்ணா...வெறுப்பு அதனாலதானா?
சென்னை:சன் டிவியில் மதிய நேர சீரியலா ஒளிபரப்பாகும் நிலா சீரியல் நிறைய கேள்விகள் எழுப்பறதால நல்லாருக்கு.
கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சுக்கவே நிலா சீரியலை விரும்பிப் பார்க்கறாங்க.நிலாவை அம்மா கவுசல்யா நடத்தற விதத்தைப் பார்த்தா, நிலா இவங்களுக்கு பொண்ணு இல்லையான்னு கேள்வி வரும்.
ராஜசேகர் நிலாவின் மீது அன்பைப் பொழிவதைப் பார்த்தால் நிலா நிச்சயம் இவரோட முதல் தாரத்துக்கு பொறந்த பொண்ணா இருப்பான்னு பேசிக்குவாங்க.
இன்னிக்குதாங்க..நிலாவுக்கு உண்மை தெரிய வருது.நிலாவை நீலாம்பரி தம்பி அசோக்குக்கு கேட்கறாங்க..குடுத்தா என்னன்னு கவுசல்யா கேட்க, நீ பெத்த பொண்ணணா இருந்தா அப்படி குடுப்பியான்னு கேட்கறார்.
நிலா மேல ஒரு நாளாவது பாசம் காமிச்சு வளர்த்திருப்பியான்னு கேட்கறார். அப்போதான் கவுசல்யா உண்மையை போட்டு உடைக்கறாங்க. நிலா வந்தது தெரியாம...மனசு வந்து இப்படி பேசாதீங்க.. நிலாவை வளர்ப்பு பொண்ணா என்னிக்காவது நான் பார்த்து இருக்கேனா..
நிலாவை 10 மாசம் வயித்துல சுமக்கலேன்னாலும் அவளை படிக்க வச்சு நல்ல விதமாத்தானே வளர்த்தேன்னு கத்தறாங்க. நிலா தன்னோட அப்பாவா இல்லாமலே அப்பா நம்ம மேல உயிரையே வச்சு இருக்காரேன்னு சொல்லி அழறா.
சவுந்தர்யா ஒரு பொளேர் ...முத்துச்செல்வி ஒரு பொளேர்..!
அப்பாகிட்ட எனக்கு யாருமே இல்லையாப்பா..இந்த குடும்பம்தான் என்னோடதுன்னு நினைச்சு வாழ்ந்துகிட்டு இருந்தேனே..இனிமே உங்களை நான் அப்பான்னு கூப்பிடலாமான்னு சொல்லி அழறா அப்பாவுக்கு தாங்கிக்க முடியாம ஹார்ட் அட்டாக் வந்துருது.
இதுல பாருங்க நிலா எப்படி வளர்ப்பு பொண்ணா ஆனான்னு கேள்விக்கு நமக்கு பதில் தெரிய பார்த்தாகணும்ல...அதான் டிவிஸ்ட்..