Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

kodeeswari: மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. அச்சு அசல் ஜெயலலிதா.. வாவ் அனுஷ்யா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னதான் சொல்லுங்க.. ஜெயலலிதா ஜெயலலிதாதான். மறைந்தாலும் அவரை மறக்காத மக்கள் இன்னும் லட்சக்கணக்கில் உள்ளனர். அதற்கு ஒரு அருமையான உதாரணத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சி கண்டுள்ளதுங்க.

ராதிகா சரத்குமார் நடத்தி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் டிவியில் கலக்கலாக போய்க் கொண்டுள்ளது. ஒரு கோடீஸ்வரியையும் கண்டு விட்டது இந்த நிகழ்ச்சி.

இந்த நிலையில் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் ஜெயலலிதா அம்மாவுக்கு ஒரு பெருமையைக் கொடுத்து விட்டது இந்த நிகழ்ச்சி. அதில் கலந்து கொண்ட அனுஷ்யாதான் அந்த பெருமையைக் கொடுத்தவர்.

சாம்ராஜ்ய ஜெயலலிதா

சாம்ராஜ்ய ஜெயலலிதா

எல்லோருக்குமே ஒரு தலைவரைப் பிடிக்கும். அது அவரவர் கொள்கை, செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து வருவது இந்த பிடித்தம். அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் ஜெயலலிதா. அவரைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி விட்டுச் சென்றவர் ஜெயலலலிதா. அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு முன்னுதாரணமாக ஜெயலலிதா இருந்து வருகிறார்.

ஸ்ரீரங்கம் அனுஷ்யா

ஸ்ரீரங்கம் அனுஷ்யா

இந்த நிலையில் ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் அச்சு அசலாக வெளிப்படுத்தி அசத்தி விட்டார். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அனுஷ்யா. இவர் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ராதிகா அவரிடம் சில கேள்விகளை கேஷுவலாக கேட்டார். அதில் ஒன்று என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

ஜெயலலிதா ஆளுமை

ஜெயலலிதா ஆளுமை

அதற்கு அனுஷ்யா. நான் அரசியல்வாதியாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் ராதிகா. உடனே உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி யார் என்று கேட்டார். அதற்கு அனுஷ்யா, ஜெயலலிதா என்று புன்னகையுடன் கூறினார். ஏன் என்று கேட்டபோது, அவரது பிரேவ், போல்ட்னஸ், ஆளுமை எல்லாமே பிடிக்கும் என்றார் அனுஷ்யா.

மக்களுக்காக நான்

அவங்களுடையே பேமஸ் டயலாக் இருக்குமே என்று ராதிகா கேட்டதும் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா பேசுவது போலவே அப்பெண் கூறியபோது நமக்கு மெய் சிலிர்த்துப் போய் விட்டது. கைத்தட்டல் வானைப் பிளந்தது. உடனே ராதிகா, செய்வீர்களா என்று கேட்க அதைக் கேட்ட அனுஷ்யா நீங்கள் செய்வீர்களா கைவிரலை உசத்தி ஜெயலலிதா கேட்பது போல சிரித்தபடி கேட்டபோது அரங்கம் அதிர்ந்து போனது.

இப்பச் சொல்லுங்க.. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளில் தான் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது பாருங்க. ஜெயலலிதாம்மா ஜெயலலிதாம்மாதான்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+