kodeeswari: மக்களால் நான்.. மக்களுக்காகவே நான்.. அச்சு அசல் ஜெயலலிதா.. வாவ் அனுஷ்யா!
சென்னை: என்னதான் சொல்லுங்க.. ஜெயலலிதா ஜெயலலிதாதான். மறைந்தாலும் அவரை மறக்காத மக்கள் இன்னும் லட்சக்கணக்கில் உள்ளனர். அதற்கு ஒரு அருமையான உதாரணத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சி கண்டுள்ளதுங்க.
ராதிகா சரத்குமார் நடத்தி வரும் கோடீஸ்வரி நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் டிவியில் கலக்கலாக போய்க் கொண்டுள்ளது. ஒரு கோடீஸ்வரியையும் கண்டு விட்டது இந்த நிகழ்ச்சி.
இந்த நிலையில் மக்கள் மனதில் வாழ்ந்து வரும் ஜெயலலிதா அம்மாவுக்கு ஒரு பெருமையைக் கொடுத்து விட்டது இந்த நிகழ்ச்சி. அதில் கலந்து கொண்ட அனுஷ்யாதான் அந்த பெருமையைக் கொடுத்தவர்.

சாம்ராஜ்ய ஜெயலலிதா
எல்லோருக்குமே ஒரு தலைவரைப் பிடிக்கும். அது அவரவர் கொள்கை, செயல்பாடுகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து வருவது இந்த பிடித்தம். அப்படிப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் ஜெயலலிதா. அவரைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. காரணம், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தனி சாம்ராஜ்ஜியமே நடத்தி விட்டுச் சென்றவர் ஜெயலலலிதா. அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு முன்னுதாரணமாக ஜெயலலிதா இருந்து வருகிறார்.

ஸ்ரீரங்கம் அனுஷ்யா
இந்த நிலையில் ஜெயலலிதா மீது கொண்ட அபிமானத்தை கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் அச்சு அசலாக வெளிப்படுத்தி அசத்தி விட்டார். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் அனுஷ்யா. இவர் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ராதிகா அவரிடம் சில கேள்விகளை கேஷுவலாக கேட்டார். அதில் ஒன்று என்னவாக விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.

ஜெயலலிதா ஆளுமை
அதற்கு அனுஷ்யா. நான் அரசியல்வாதியாக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார் ராதிகா. உடனே உங்களுக்குப் பிடித்த அரசியல்வாதி யார் என்று கேட்டார். அதற்கு அனுஷ்யா, ஜெயலலிதா என்று புன்னகையுடன் கூறினார். ஏன் என்று கேட்டபோது, அவரது பிரேவ், போல்ட்னஸ், ஆளுமை எல்லாமே பிடிக்கும் என்றார் அனுஷ்யா.
|
மக்களுக்காக நான்
அவங்களுடையே பேமஸ் டயலாக் இருக்குமே என்று ராதிகா கேட்டதும் மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று அப்படியே அச்சு அசலாக ஜெயலலிதா பேசுவது போலவே அப்பெண் கூறியபோது நமக்கு மெய் சிலிர்த்துப் போய் விட்டது. கைத்தட்டல் வானைப் பிளந்தது. உடனே ராதிகா, செய்வீர்களா என்று கேட்க அதைக் கேட்ட அனுஷ்யா நீங்கள் செய்வீர்களா கைவிரலை உசத்தி ஜெயலலிதா கேட்பது போல சிரித்தபடி கேட்டபோது அரங்கம் அதிர்ந்து போனது.
இப்பச் சொல்லுங்க.. வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற வரிகளில் தான் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது பாருங்க. ஜெயலலிதாம்மா ஜெயலலிதாம்மாதான்..
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications