நடிகர் ஜூனியர் பாலையா பேரன் யார் தெரியுமா? கயல் சீரியல் ஹீரோ தான்! இத்தனை தொடரில் நடித்திருக்கிறாரே?
சென்னை: பழம்பெரும் நடிகர் டி.எஸ். பாலையாவின் மகனான ஜூனியர் பாலையா 2023 ஆம் ஆண்டு காலமானார். அவருடைய பேரன் சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்ட வீடியோ தான் இப்போது பலருடைய கவனத்தைப் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் பழம்பெறும் நடிகர்கள் ஒரு சிலரை இப்போதைய ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் நடிகர் பாலையா எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களுடன் நடித்திருக்கிறார். அப்போது பாலையா நாடகங்களில் நடித்து பிறகு சினிமாவிற்குள் நுழைந்ததால் நடிப்பில் அத்துபிடியாக இருந்திருக்கிறார். வில்லன், காமெடியன், குணச்சித்திர வேடம் என எது கொடுத்தாலும் அதில் தன்னுடைய பெஸ்ட்டை கொடுத்து இருக்கிறார்.

பாலையாவிற்கு மூன்று மனைவிகள், மொத்தம் ஏழு பிள்ளைகளாம். அதில் ஒருவர் தான் ரகு. அவரும் தன்னுடைய அப்பாவை போலவே எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்டாக நடித்து விடுவாராம். அதனாலே பிறகு தன்னுடைய பெயரை ஜூனியர் பாலையா என்று மாற்றி இருக்கிறார். நடிகர் கமல் நடித்த மேல்நாட்டு மருமகள் படத்தின் மூலமாகத்தான் ஜூனியர் பாலையாவிற்க்கு ஒரு பிரபலம் கிடைத்திருக்கிறது.
அதற்கு பிறகு கமலுடன் நடித்த வாழ்வே மாயம், சிவாஜி நடித்த தியாகம் என பல படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்திருக்கிறார். அடுத்ததாக கோபுர வாசலிலே படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அந்த படத்தில் கார்த்திக், சார்லி, நாசர், ஜனகராஜ் உடன் இவரும் நண்பராக நடித்து இருப்பார். பிறகு கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் படத்தில் ஜூனியர் பாலாவும் ஒருவராக நடித்திருந்தார்.

ஜூனியர் பாலையாவுக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது என்றால் அது சுந்தர காண்டம் என்ற படம் தான். அந்த படத்தில் பாக்கியராஜ் சண்முகமணி என்று இவரை அழைப்பார். அதற்கு பிறகு பாக்யராஜ் உடன் பல படங்களில் நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் சமுத்திரக்கனியின் சாட்டை, அஜித்துடன் நேர்கொண்ட பார்வை போன்ற படங்களிலும் நடித்து இப்போதைய தலைமுறையினருக்கும் தெரிந்த ஒரு முகமாக இருந்தார்.
பாலையா வெள்ளித் திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சித்தி சீரியலில் விஸ்வநாதன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சின்ன பாப்பா பெரிய பாப்பா மட்டும் அல்லாமல் இன்னும் ஒரு சில சீரியல்களிலும் நடித்திருந்தார். ஆனாலும் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் காலமானார். அவருடைய பேரன் இப்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜூனியர் பாலையாவின் பேரன் வேறு யாரும் இல்லை. கயல் சீரியலில் கதாநாயகனின் பிரண்டாக நடித்த மோகித் பாழையா தான். இவர் ஏற்கனவே சந்திரலேகா மற்றும் பூவா தலையா சீரியலிலும் நடித்திருக்கிறாராம். இது பற்றி மோகித் பேசும்போது நான் கயல் சீரியலில் நடிக்கும் போது எனக்கு ரொம்பவும் பெரிய பிரபலம் கிடைத்தது. பொதுவாக சீரியல்களில் நடிக்கிறோம் என்றாலே அது எளிமையாக மக்கள் மனதில் இடம் கிடைத்துவிடும்.

அதேபோல எனக்கு கயல் சீரியலில் நடிக்கும் போது ஹீரோ உடைய பிரண்டுக்கும், ஹீரோவுக்கும் எனக்கும் அதிக காட்சிகள் இருக்கும் என்றும், ஹீரோவின் அப்பாவோடு காமெடி காட்சிகள் இருக்கும் என்றும் சொன்னார்கள். அது போலவே இருந்தது. பிறகு ஹீரோவின் உறவுக்கார பெண்ணை கல்யாணம் பண்ணுவது போலவும் எனக்கு கேரக்டர் மாதிரி இருக்கிறது.
இந்த சீரியல் எனக்குன்னு ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. ஆனாலும் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்போது பல ஏமாற்றங்கள் தான் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கேட்க போகும் இடமெல்லாம் ஜூனியர் பாலையா பேரன் என்று எல்லோரும் அடையாளப்படுத்துகிறார்கள். இதனால் ஒரு சிலர் நம்மிடம் நல்லா பேசினாலும் சிலர் இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கணுமா? என்பது போலவே யோசிக்கிறார்கள் என்று வருத்தத்தையும் மோகித் பகிர்ந்து இருக்கிறார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications