கண்மணி அன்போடு... அட, ஒரே சிக்கலா இருக்கேப்பா...!
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் ஒரு பணக்கார பையனை,பஞ்சம் பிழைக்க வந்த ஒரு பொண்ணு காதலிச்சா என்ன ஆகும்னு ரொம்ப தெளிவா காமிக்கறாங்க.
முத்துச்செல்வி சின்னவர் மேல ஆசைப்பட, அந்த காதலும் ஏதோ ஒரு வகையில கைகூடி கல்யாணம் வரைக்கும் வந்துருது. ஒண்ணுமே தெரியாத அப்பாவிங்களா இருந்தாலும் நல்லலா வசனம் பேசறாங்க
முத்துசெல்வி தங்கச்சியா நடிக்கற சின்ன பொண்ணு நல்லா நடிச்சிருக்கு. ஆனா, ஓவரா பேசற மாதிரியான கேரக்டர். யாருகிட்ட எது கேட்டா நடக்கும்னு சொல்லி, சின்னய்யா வீட்டுல காரியம் நடத்திக்குது.
இந்த நேரத்துல சின்னவரு வீட்டுல இருக்கற ரெண்டு நாத்தனார்களும் முத்துச்செல்வி அப்பாகிட்ட நகை போட்டு,வரதட்சணை குடுத்து கல்யாணம் பண்ணனும்னு மிரட்டறாங்க.இதை இந்த சின்னப் பொண்ணு,சின்னய்யாகிட்டயே போட்டு குடுத்துருது.
இதனால கடுப்பான நாத்தனார் ரெண்டு பேரும் முத்துசெல்வி குடும்பத்தை கண்டபடி திட்டிட்டு போறாங்க. இதுக்கப்புறம்தான் வேடிக்கையே.. இந்த கல்யாணம் வேண்டாம்ப்பான்னு அழறா முத்துச்செல்வி.
ஆனா,அடுத்த நிமிஷமே சின்னவருக்கு விருந்து வைக்கணும்ப்பான்னு சொல்றா.அப்பா வீராப்பா பணம் நகையோட வர்றேன்னு சொல்லிட்டு வெளியில கிளம்பறார்.. அவர் பேரும் வீரய்யாதான்.
கோயிலில் போயி உட்கார்ந்தவரு அங்கேயே தூங்கிடறார். முத்துச்செல்வி .தங்கச்சியோட அப்பாவை தேடிப் போறா.கோயில் வாசலில் அப்பாவின் செருப்பு கிடக்கு.கதவு ஓட்டை வழியா பார்த்தா அப்பா படுத்து கிடக்கார்.
இந்த சின்னப்பொண்ணு இருக்கே அது நல்ல வெவரம்..கோயில் சுவரை தாண்டி குதிச்சு, அப்பாவையும் அதே போல சுவரைத் தாண்டி அழைச்சுக்கிட்டு வர்றா. இதை மாயன் பார்த்துட்டு வீடியோ எடுத்து, கோயில் நகைகளை திருடி முத்துச்செல்வி வீட்டில் வச்சுடறான்.
இப்போ..வீரய்யன்,முத்துச்செல்வி கோயில் நகைகளை திருடிட்டாங்க..மறு நாள் போலீஸ் வந்து.ரெண்டு போரையும் அடிச்சு இழுத்துகிட்டு போறாங்க..வீட்டு பெரியவர் இல்லாத நேரத்தில்.
இதுக்குத்தான் பெரியவங்க சொல்லுவாங்க.. விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும்னு.. அதிகமா ஆசைப்படக் கூடாதுன்னு...