For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Kanmani Serial: சொன்னபடி நடக்குது நினைச்சபடி கதை போகுது...!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் தெரிந்தோ தெரியாமலோ முத்துச்செல்வியை கதையில் கொண்டு வந்து விட்டார்கள். சின்னவருக்கும் தனக்கும் குழந்தை பிறப்பது போல முத்துச்செல்வி கனவு காண்கிறாள்.

இப்போது அதுதான் நடக்கப் போகிறது. காரணம் சவுந்தர்யாவுக்கு இனி குழந்தை பிறக்காது என்று டாக்டர் சொன்னதை முத்துச்செல்வியும் கேட்டுவிடுகிறாள்.

இன்னொரு பெண் உதவி செய்தால், அந்த பெண்ணின் கணவர் மூலமாக அவள் குழந்தை பாக்கியம் பெறலாம் என்கிற உண்மையையும் டாக்டர் சொல்ல முத்துச்செல்வி அதை அறிந்தும் கொண்டாள்.

ஒரு சிங்கம் முயலாகிறது

ஒரு சிங்கம் முயலாகிறது

எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய கதை ஒரு சிங்கம் முயலாகிறது. அது படமாக எடுக்கப்பட்டபோது அவன் அவள் அது என்று எடுக்கப்பட்டது. இப்போது ஒரு வகையில் அந்த கதை படமாக்கப்படுவது போல இந்த சீரியலின் கதையின் போக்கும் இருக்கலாம். முற்றிலுமாக இல்லை என்றாலும் அந்த கதையின் தாக்கத்தோடு இருக்கும்.

சவுந்தர்யா முத்துச்செல்வி

சவுந்தர்யா முத்துச்செல்வி

சவுந்தர்யாவுக்குத் தெரியாமல் டாக்டரின் உதவியோடு கண்ணனின் குழந்தையை முத்துச்செல்வி சவுந்தர்யா அம்மாவுக்கு பெற்றுத் தர நினைக்கலாம். காலப் போக்கில் உண்மை தெரிந்து சவுந்தர்யா முத்துச்செல்வியை மாமன் கண்ணனுக்கு இன்னொரு தாரமாக கட்டி வைக்க நினைக்கலாம்.

அப்படி இருப்பதில்லை

அப்படி இருப்பதில்லை

சமுதாயத்தில் முத்துச்செல்வி போன்ற பெண்களின் உண்மை நிலை அப்படி இருப்பதில்லை. இப்படி ஒரு நிலையை சந்தித்துவிட்டு இல்லை என்று ஆன நிலையில் வேறு ஊருக்கு சென்று வாழும் பெண்கள் வேறு வாழ்க்கையைத் தேடி சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து, தங்கை, அப்பாவை காப்பாற்ற முனைந்து வாழ்வதுதான் இயற்கை.

காலச் சக்கரத்தை

காலச் சக்கரத்தை

கதைக்கு என்று காலச் சக்கரத்தை ஒரே இடத்தில் சுற்ற வைத்து மக்களை ஏமாற்றி இதுதான் வாழ்க்கை என்று ஒரு கட்டுக்குள் அடக்கி விடுகின்றன சீரியல்கள். இதில் இருந்து மக்கள் வெளியில் வந்தால்தான் விரிந்து பரந்த சமுதாயத்தை மக்கள் அகன்ற விழிகளைக் கொண்டு பார்க்க முடியும்.

English summary
Sun TV's kanmani has come to know the story of Muthuchelvi in ​​the serial. Muttuchelvi dreams of giving birth to her little boy and herself.Now that's going to happen. Mutuchelvi also listens to the doctor saying that Soundarya is no longer able to have a baby.Mutuchelvi learned to tell the doctor the fact that the woman could be blessed by her husband if another woman helped.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X