Kanmani Serial: ஒரு வருஷம் ஆகலை.. சமூகத்தை கெடுத்து விடும் போலிருக்கிறதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் சவுந்தர்யாவுக்கும் வளர்மதிக்கு ஒரே சமயத்தில்தான் கல்யாணம் ஆச்சு..ஒரு வருஷம் ஆகலை..குழந்தை இல்லைன்னு குத்திக் காண்பிக்கறாங்க.

குழந்தை பிறக்கலேன்னு சவுந்தர்யாவை மட்டும் வளர்மதியின் அம்மா கரிச்சுக்க கொட்டறாங்க...

விளக்கேத்த கூடாதாம்...விழாவில் கலந்துக்க கூடாதாம்...

கண்மணி கண்ணன்

கண்மணி கண்ணன்

கண்மணிக்கும் சின்னவர் கண்ணனுக்கும் கல்யாணம் ஆன கையோடு குழந்தை உண்டாகி விடுகிறது. உடனே குடும்பமே குதூகலிக்க... காரணமே இல்லாமல் ஒரு கடத்தல்...ஒரு விபத்து...அதில் வயிற்றில் இருக்கும் குழந்தை கலைந்து விடுகிறது.

பெரிதாக காரணம்

பெரிதாக காரணம்

பெரிதாக ஒரு காரணமும் சொல்லாமல், இனி சவுந்தர்யாவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லி விடுகிறார் டாக்டர். குடும்பத்தில் பெண்ணெடுத்த மாப்பிள்ளை குழந்தை இல்லை என்று கண்ணனை குத்தி குத்தி காண்பிக்கிறான்.

வளர்மதி ஆகாஷ்

வளர்மதி ஆகாஷ்

சவுந்தர்யா கண்ணன் திருமணத்தின் போதுதான் அதே குடும்பத்தின் பெண் வளர்மதிக்கும் ஆகாஷுக்கும் கூட திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தை இல்லை . ஆனால், அதை பெரிதாக எடுத்துக்காத சித்தி, சவுந்தர்யாவுக்கு குழந்தை இல்லை என்பதை மட்டும் குத்திக் காமிகாறாங்களாம்.

ஒரு வருஷம் ஆகலை

ஒரு வருஷம் ஆகலை

கல்யாணமாகி ஒரு வருஷம் கூட ஆகலை. அதுக்குள்ளே குழந்தை இல்லைன்னு இந்த சமூகத்தில் குத்திக் காமிக்கும் அவல நிலை இன்னும் வரவில்லை. இந்த சீரியல்கள் அதை எல்லாம் இந்த சமூகத்துக்கும் கற்றுக் கொடுத்துவிடும் போலிருக்கிறது.சமூகத்தை கெடுத்தும் விடும் போலிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+