Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஜெயம் ரவிக்கும் எனக்கும் என்ன தொடர்புனு தெரியணுமா?"! ஒரே ஒரு போஸ்ட்டில் விளக்கிய கெனிஷா பிரான்சிஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே இருக்கும் உறவு என்ன என்பது குறித்து கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா பிரான்சிஸ் விளக்கமளித்துள்ளார். நேற்றைய தினம் ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து கெனிஷா குறித்து தெளிவுப்படுத்தியிருந்தார்.

நடிகர் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரவ், ஆர்யன் என இரு மகன்கள் உள்ளனர். சுமார் 15 வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தனது காதல் மனைவியை பிரிவதாக அறிவித்தார்.

television jayam ravi aarti ravi

மேலும் அடுத்த நாளே அவருடைய பிறந்தநாள் அதுவுமாக சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, இரு தினங்களுக்கு பிறகு எதிர் வினையாற்றினார்.

அதில் ஜெயம் ரவியின் முடிவு என்னை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது. அவரே தன்னிச்சையாக எடுத்த முடிவு. அவரை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. என்னை பற்றி அவதூறு பரப்புவதை என்னால் ஏற்க முடியாது. என் குழந்தைகளுக்கு என்ன வழி என ஆர்த்தி , இரு குழந்தைகளின் தாயாக தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.

இந்த நிலையில்தான் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் பழக்கம் இருப்பதால்தான் தனது மனைவியை பிரிய ஜெயம் ரவி முடிவு செய்தார் என இணையத்தில் தகவல் பரவியது. இந்த நிலையில் இதற்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில்தான் ஜெயம் ரவி நேற்று பிரதர் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்க தெரியாது என சொல்வதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கெனவே இரு நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறேன்.

அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தனக்கு தெரியாது என அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக நான் அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக எதிர் கொள்வேன். எனக்கும் கெனிஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அதை பேசியவர்களுக்குத்தான் அசிங்கம்.

அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்திலிருந்து எத்தனையோ பேரை அவர் மீட்டெடுத்துள்ளார். அவருடன் ஒரு ஹீலிங் மையம் தொடங்கவுள்ளேன் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கெனிஷா ரவி எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி பேசியிருந்ததை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து போட்டிருந்தார்.

மேலும் கெனிஷா கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராமில் நட்பிலும் அதீத அன்பு உண்டு. அதை மக்கள் மறந்துவிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இதை நெட்டிசன்கள் ஏற்க மறுத்து ஜெயம் ரவி எங்கே, ஆர்த்திக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+