"ஜெயம் ரவிக்கும் எனக்கும் என்ன தொடர்புனு தெரியணுமா?"! ஒரே ஒரு போஸ்ட்டில் விளக்கிய கெனிஷா பிரான்சிஸ்
சென்னை: தனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே இருக்கும் உறவு என்ன என்பது குறித்து கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா பிரான்சிஸ் விளக்கமளித்துள்ளார். நேற்றைய தினம் ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்து கெனிஷா குறித்து தெளிவுப்படுத்தியிருந்தார்.
நடிகர் ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆரவ், ஆர்யன் என இரு மகன்கள் உள்ளனர். சுமார் 15 வருடங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் திடீரென கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தனது காதல் மனைவியை பிரிவதாக அறிவித்தார்.

மேலும் அடுத்த நாளே அவருடைய பிறந்தநாள் அதுவுமாக சென்னை நீதிமன்றத்தில் திருமணத்தை ரத்து செய்யக் கோரி மனுவும் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி, இரு தினங்களுக்கு பிறகு எதிர் வினையாற்றினார்.
அதில் ஜெயம் ரவியின் முடிவு என்னை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்பட்டது. அவரே தன்னிச்சையாக எடுத்த முடிவு. அவரை சந்திக்க பல முறை முயற்சி செய்தும் அது நடக்கவில்லை. என்னை பற்றி அவதூறு பரப்புவதை என்னால் ஏற்க முடியாது. என் குழந்தைகளுக்கு என்ன வழி என ஆர்த்தி , இரு குழந்தைகளின் தாயாக தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்.
இந்த நிலையில்தான் ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கும் பழக்கம் இருப்பதால்தான் தனது மனைவியை பிரிய ஜெயம் ரவி முடிவு செய்தார் என இணையத்தில் தகவல் பரவியது. இந்த நிலையில் இதற்கு ஜெயம் ரவி விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில்தான் ஜெயம் ரவி நேற்று பிரதர் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் எடுத்த விவாகரத்து முடிவு அவருக்க தெரியாது என சொல்வதில் எந்த லாஜிக்கும் இல்லை. அவருக்கு ஏற்கெனவே இரு நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறேன்.
அவர்கள் தரப்பில் பேசியும் இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது தனக்கு தெரியாது என அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக நான் அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக எதிர் கொள்வேன். எனக்கும் கெனிஷாவுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்கிறார்கள். அதை பேசியவர்களுக்குத்தான் அசிங்கம்.
அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்திலிருந்து எத்தனையோ பேரை அவர் மீட்டெடுத்துள்ளார். அவருடன் ஒரு ஹீலிங் மையம் தொடங்கவுள்ளேன் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கெனிஷா ரவி எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவி பேசியிருந்ததை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து போட்டிருந்தார்.
மேலும் கெனிஷா கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராமில் நட்பிலும் அதீத அன்பு உண்டு. அதை மக்கள் மறந்துவிடுகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயினும் இதை நெட்டிசன்கள் ஏற்க மறுத்து ஜெயம் ரவி எங்கே, ஆர்த்திக்கு ஏன் துரோகம் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications