மன்னனும் நானே குட்டி சுட்டீஸும் நானே...!
சென்னை: சன் டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியில் மன்னன் என்கிற பெயரில் ஒரு குழந்தை கலந்துக் கொண்டு சிறப்பித்து உள்ளதை சன் டிவி அதன் முக நூல் பக்கத்தில் பதிவிட்டு சிறப்பித்து உள்ளது.
நிகழ்ச்சியை நடத்தும் கோவை சரளா குழந்தையுடன் நடத்தும் உரையாடல் மிக சிறப்பாக உள்ளது.
கடந்த சில வாரங்களாக சன் டிவியின் குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகை கோவை சரளா நடத்தி வருகிறார்.

முன்பு அண்ணாச்சி
குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இமான் அண்ணாச்சி நடத்தி வந்தார். நிகழ்ச்சி கலகலவென்று சிறப்பாக இருந்தது.இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டு சீனியர் சுட்டீஸ் என்று புதிய நிகழ்ச்சியை சன் டிவி இமான் அண்ணாச்சியை வைத்து நடத்தியது.

சிறப்பாக இல்லை
சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி சன் டிவியின் சீரியல் நட்சத்திரங்களுடன் கொஞ்சம் ஓவராகவே உரசி உரசி முகம் சுளிக்கும்படி அண்ணாச்சி நடந்து கொண்டார். இந்நிலையில் திடீரென்று அண்ணாச்சி சன் டிவியின் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சி மற்றும் சீனியர் சுட்டீஸ் நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டார்.

அண்ணாச்சி நிகழ்ச்சி
கலர்ஸ் தமிழ் டிவியில் இமான் அண்ணாச்சியின் நிகழ்ச்சி களைக்கட்ட துவங்கியது. இதையடுத்து கோவை சரளாவை வைத்து சன் டிவி குட்டி சுட்டீஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்தது. கோவை சரளாவை வைத்து நிகழ்ச்சியைத் துவங்குகிறதே சன் டிவி. எப்படி இருக்குமோ, என்னாகுமோ என்கிற எதிர்பார்ப்பில் இருந்த நேரத்தில் நிகழ்ச்சி நன்றாகவே இருந்து வருகிறது.

நடிகை கோவை சரளா
காஞ்சனா படத்தின் மூலம் குழந்தைகளுக்குப் பிடித்த நடிகையான கோவை சரளா குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி பேசி நிகழ்ச்சியை மிக சிறப்பாகவே நடத்தி வருகிறார். இந்த வாரம் வரப்போகும் நிழ்ச்சியில் ஒரு குழந்தை கோவை சரளாவுக்கு வைக்கும் வணக்கத்தை அனாயசமாக வைக்கிறது.

மன்னர் குழந்தை
ஒரு குழந்தை கோவை சரளாவிடம் பன்ச் வசனம் பேசுகிறது. இன்னொரு குழந்தை தனது பெயர் மன்னர் என்று கூறி, இந்த இந்த ஊருக்கு தான் மன்னர் என்று கூறுகிறது.,மீன் வறுப்பது எப்படி என்று கூறுகிறது. பரவாயில்லை... அண்ணாச்சிக்கு தான் சோடை போனவர் இல்லை என்று நிரூபித்து உள்ளார் கோவை சரளா.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications