மடியிலே பிரிந்த உயிர்.. கோவை குணாவின் இறுதி நிமிடத்தில் நடந்தது இதுதான்.. மனைவி கூறிய தகவல்கள்
சென்னை: சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் முதல் டைட்டில் வின்னர் என்ற பெருமையை பெற்ற கோவை குணா நேற்று உடல் நல குறைவால் காலமாகி இருக்கிறார்.
குணாவின் இறப்பு பற்றி பலர் பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் குணாவின் இறப்பு நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மனைவி பேசி இருக்கிறார்.

திடீர் மரணம்
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது. கடந்த மூன்று வருடங்களாகவே அவர் அதற்கான டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார். பல ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நிலை மோசமாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் அதிகப்படியாக குடிப்பழக்கம் இருந்ததால்தான் இப்படி ஆகிவிட்டது என்று அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மதன் பாபு சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

வயிற்றுப்போக்கு
இந்த நிலையில் குணாவின் இறப்பு பற்றி அவருடைய மனைவி பேசிய வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இது குறித்து அவரது மனைவி," அவருக்கு சில நாட்களாகவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதற்கு தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு வாரமாக அவருக்கு வயிற்றுப்போக்கு நிற்கவேயில்லை. அதற்குத்தான் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். அவங்க மருந்துகளை சாப்பிட்ட பின்பும் அவருக்கு குணமாகவில்லை.

அதிகமான வலி
மேலும் அவரது ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி இருந்தார்கள். அதனுடைய முடிவுகள் தற்போது வரை கூட வரவில்லை. வயிற்றுப்போக்கிற்கு அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டும் அவரால் முடியவில்லை. அப்போது எனக்கு தெரிந்து விட்டது ஏதோ ஆகப் போகிறது என்று உடனே நான் சர்ச்சுக்கு போன் செய்து ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னேன். அவர்களும் எங்களுக்காக ஜெபம் செய்தார்கள் ஆனால் சிறிது நேரத்திலேயே வலி மிகவும் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் இடமும் சொன்னார். அவர்களும் எல்லா மருந்துகளையும் கொடுத்தார்கள்.. ஆனால் அவருக்கு குணமாகவில்லை நான் தான் அவரை மடியில் வைத்து நீவி விட்டுக் கொண்டிருந்தேன்.

மடியில் பிரிந்த உயிர்
பின்னர் என்னுடைய மகள் வந்ததும் அவரது மடியில் அவர் படுத்து கொண்டார். அதன் பிறகு அவர் வாந்தி எடுத்தார். உடனே மருத்துவர்கள் அழைத்துப் பார்த்தபோது எல்லாமே முடிந்து விட்டது. கர்த்தருடைய கிருபையில் இத்தனை ஆண்டுகள் அவர் இருந்தது பெரிய அதிசயம் தான் என்று கூறியுள்ளார். குணாவின் உடல் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும், நகைச்சுவை நடிகர்கள், குரல் கலைஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கலை செலுத்தி வருகின்றனர்.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய பாரதிராஜா.. தன்னம்பிக்கை மனிதனின் எழுச்சி! லீக்கான போட்டோஸ் -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பிரதமர் நடித்த ஒரே படம் அமைதிப்படை தான்.. அதுவும் இந்த காட்சியை மறக்க முடியுமா? சத்யராஜ் சர்ச்சை பேச்சு -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை












Click it and Unblock the Notifications