மடியிலே பிரிந்த உயிர்.. கோவை குணாவின் இறுதி நிமிடத்தில் நடந்தது இதுதான்.. மனைவி கூறிய தகவல்கள்
சென்னை: சன் டிவியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் முதல் டைட்டில் வின்னர் என்ற பெருமையை பெற்ற கோவை குணா நேற்று உடல் நல குறைவால் காலமாகி இருக்கிறார்.
குணாவின் இறப்பு பற்றி பலர் பல்வேறு தகவல்களை கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் குணாவின் இறப்பு நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி அவருடைய மனைவி பேசி இருக்கிறார்.

திடீர் மரணம்
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கோவை குணாவிற்கு சிறுநீரக பிரச்சனை இருந்தது. கடந்த மூன்று வருடங்களாகவே அவர் அதற்கான டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்தார். பல ஆண்டுகளாகவே அவருக்கு உடல்நிலை மோசமாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் அதிகப்படியாக குடிப்பழக்கம் இருந்ததால்தான் இப்படி ஆகிவிட்டது என்று அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்த மதன் பாபு சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

வயிற்றுப்போக்கு
இந்த நிலையில் குணாவின் இறப்பு பற்றி அவருடைய மனைவி பேசிய வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இது குறித்து அவரது மனைவி," அவருக்கு சில நாட்களாகவே வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதற்கு தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு வாரமாக அவருக்கு வயிற்றுப்போக்கு நிற்கவேயில்லை. அதற்குத்தான் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். அவங்க மருந்துகளை சாப்பிட்ட பின்பும் அவருக்கு குணமாகவில்லை.

அதிகமான வலி
மேலும் அவரது ரத்தத்தை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி இருந்தார்கள். அதனுடைய முடிவுகள் தற்போது வரை கூட வரவில்லை. வயிற்றுப்போக்கிற்கு அவர் மருந்து மாத்திரை சாப்பிட்டும் அவரால் முடியவில்லை. அப்போது எனக்கு தெரிந்து விட்டது ஏதோ ஆகப் போகிறது என்று உடனே நான் சர்ச்சுக்கு போன் செய்து ஜெபம் செய்யுங்கள் என்று சொன்னேன். அவர்களும் எங்களுக்காக ஜெபம் செய்தார்கள் ஆனால் சிறிது நேரத்திலேயே வலி மிகவும் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர்கள் இடமும் சொன்னார். அவர்களும் எல்லா மருந்துகளையும் கொடுத்தார்கள்.. ஆனால் அவருக்கு குணமாகவில்லை நான் தான் அவரை மடியில் வைத்து நீவி விட்டுக் கொண்டிருந்தேன்.

மடியில் பிரிந்த உயிர்
பின்னர் என்னுடைய மகள் வந்ததும் அவரது மடியில் அவர் படுத்து கொண்டார். அதன் பிறகு அவர் வாந்தி எடுத்தார். உடனே மருத்துவர்கள் அழைத்துப் பார்த்தபோது எல்லாமே முடிந்து விட்டது. கர்த்தருடைய கிருபையில் இத்தனை ஆண்டுகள் அவர் இருந்தது பெரிய அதிசயம் தான் என்று கூறியுள்ளார். குணாவின் உடல் விளாங்குறிச்சி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது இறப்பிற்கு பல்வேறு பிரபலங்களும், நகைச்சுவை நடிகர்கள், குரல் கலைஞர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கலை செலுத்தி வருகின்றனர்.
-
விஜய்யின் விவாகரத்து பிரச்சனை.. மகன் ஜோசன் ஈரோடு தொழிலாளர்களுடன் செய்த செயல்! குவியும் பாராட்டு -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம் -
விஜய்க்காக நாஞ்சில் விஜயன் போட்ட வீடியோ.. அவருக்கே பிரச்சனை! போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் சீரியல் நடிகை வைஷு -
வருணுடன் திருமணத்தை நிறுத்தியது இதனால்தான்! அப்பவே வெளிப்படையாக பேசிய திரிஷா.. காரணம் இதுதானாமே! -
அந்த படத்தில் பிகினியில் நடித்ததால் நடந்த சம்பவம்! பல வருடங்களுக்கு பிறகு வருத்தத்தை பகிர்ந்த பிரியா மணி -
சின்னத்திரை பிரபலம் வீட்டு பங்க்ஷனில் நடிகர் ராமராஜன்.. நெகிழ வைத்த காட்சி! வியந்து போன மதுரை -
இயக்குனர் பாலு மகேந்திரா மகளுக்கு என்ன ஆச்சு? கண்கலங்கியபடி அவரே வெளியிட்ட வீடியோ! குவியும் ஆறுதல் -
“எப்போது என்ன நடக்கும்னு சொல்ல முடியாது! அது வேதனையான சம்பவம்” நடிகை பிரியங்கா மோகன் உருக்கம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications