Pugazh: "தந்தை வழியில் மகள்!" KPY புகழின் மகளுக்கு மூன்றாவது உலக சாதனை! அதுவும் எதற்கு தெரியுமா?
சென்னை: விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு?' மற்றும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிகள் மூலம் உச்சம் தொட்டு கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்றவர் நடிகர் புகழ். எளிமையான பின்னணியில் இருந்து வந்து, இன்று திரைப்படங்களில் கலக்கி கொண்டிருக்கும் புகழின் மகள் ரிதன்யா புகழேந்தி, தனது மூன்றாவது உலக சாதனையை படைத்து சாதனையாளர்களின் பட்டியலில் இணைந்திருப்பது, ஒட்டுமொத்த இணையத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சாதனை மகளின் மூன்றாவது படைப்பு
புகழின் மனைவி பென்சி, இன்று தனது மகளின் சாதனை குறித்த பதிவை இன்ஸ்டாகிராமில் வெளியிட, அது ஒரே நிமிடத்தில் வைரலாகி விட்டது. கைக் குழந்தையான ரிதன்யா புகழேந்தி, தனது 1 வயது 1 மாதத்தில் (Toddler) 2 கிலோ எடை கொண்ட டம்பல்ஸை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டு 10 மீட்டர் தூரம் நடந்து முடித்து, 'International Book of Record' சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
புகழின் மகிழ்ச்சி
இந்த பதிவில், "எங்களுடைய மகள் மூன்றாவது International Book of Record சாதனையை முடித்துவிட்டார்" என்று பெருமிதத்துடன் பென்சி தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை, KPY பாலா உள்ளிட்ட பலப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருவதால், இந்த பதிவு இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
இதற்கு முன் 2 சாதனைகள்
இவ்வளவு சின்ன வயதில் ரிதன்யா சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னரும் 2 சர்வதேச சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
முதல் சாதனை: தனது சில மாதக் குழந்தை பருவத்திலேயே,அதிகமான நேரம் டம்பல்ஸை கையில் தூக்கி வைத்துக் கொண்டு நின்ற சாதனையை செய்தார். இரண்டாவது முறையாக, சிறு வயதில் மாடி படியில் வேகமாக ஏறி ஒரு சாதனையை படைத்து, World Book of Records உட்பட பல புத்தகங்களில் இடம்பிடித்தார். தற்போது, தனது 1 வயதில் 2 கிலோ டம்பல்ஸை தூக்கிக் கொண்டு நடந்து மூன்றாவது சாதனையை படைத்திருப்பது, அவரது சாதனை பட்டியலை பிரமிக்க வைக்கிறது.
புகழின் பயணம்
நடிகர் புகழின் தனிப்பட்ட வாழ்க்கை, அவருடையப் பல சாதனைகளுக்கு அடித்தளமாக உள்ளது. ஆரம்ப காலத்தில், கலக்கப்போவது யாரு போன்றச் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வாய்ப்புப் பெறுவதற்கு முன்பு, சாப்பாட்டுக்கேக் கஷ்டப்படும் அளவுக்கு அவர் மிகவும் வறுமையிலிருந்தார். அதுபோல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு தான் இவர் பிரபலமானார். அதற்கு பிறகு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் அவர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றுச் சேர்ந்தார். இன்று முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க, பெரிய சம்பளத்தைப் பெறும் அளவுக்கு முன்னேறி உள்ளார்.
தன் வாழ்க்கையில் எவ்வளவு சவால்கள் இருந்தாலும், குடும்பத்தின் மீதும், நண்பர்கள் மீதும் பாசத்துடன் இருக்கும் புகழை போலவே, அவரது மகளும் தன் சின்ன வயதிலேயே சாதனைகளில் முத்திரை பதிப்பது, ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கும் பெருமை சேர்க்கிறது. கஷ்டமான சூழ்நிலையிலும் தனதுத் திறமையாலும், உழைப்பாலும் வளர்ந்த ஒரு கலைஞனின் மகள், தன் ஒரு வயதிலேயே சர்வதேசச் சாதனைகளைப் படைப்பது, உழைப்புக்கு கிடைத்தப் பரிசாகவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரிதன்யா இன்னும் பல சாதனைகளை படைக்க, புகழும் அவரதுக் குடும்பமும் மேலும் பல படிகட்டுகள் ஏற வேண்டும் என்று பலரும் அன்புடன் வாழ்த்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications