சொந்த விமானம் வைத்திருந்த ஒரே நடிகை கே.ஆர். விஜயா.. சில நடிகைகள் கல்யாணமே செய்வதில்லை.. ஏன்: பிரபலம்
சென்னை: திருமணமானதுமே உடல் வாகு, தோற்றம் போய்விடும் என்பதால்தான், பல நடிகைகள் திருமணம் செய்ய காலம் தாழ்த்துகிறார்கள்.. அல்லது திருமணமே செய்து கொள்ளாமல் தவிர்க்கிறார்கள்.. இப்போதெல்லாம் அந்த பிரச்சனை இல்லை.. நடிகைகள் வாடகை தாயிடம் குழந்தைக்காக ஏற்பாடு செய்து விடுகிறார்கள் என்று மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் டாக்டர் காந்தராஜ். அப்போது, "நடிகைகள் பலரும் ஏன் திருமணம் செய்து கொள்வதில்லை" என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டாக்டர் காந்தராஜ் சொன்னபோது, "நடிகைகள் என்பவர்கள் பலருக்கும் கனவுக்கன்னி.. நடிகையை திருமணம் செய்து கொள்ள போவதாக பலரும் சொல்வது அந்த காலத்திலிருந்தே இருக்கிறது..

நடிகைகள் கனவு கன்னி
நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, ஒரு பிரபல நடிகைக்கு திடீர் திருமணம் என்று தலைப்பு செய்தி வந்தது. எனக்கு பக்கத்து அறையில் தங்கியிருந்த ஒரு மாணவர் அதை பார்த்துவிட்டு, போச்சு, கல்யாணம் ஆயிடுச்சா, நான் கல்யாணம் செய்யலாம் என்றிருந்தேனே" என்றார்.
நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால், அவர்களுக்கென கணவன், குடும்பம், என்று அமைந்துவிடுவதால், அவர்களை இளைஞர்கள் யாரும் கண்டுகொள்வதில்லை.. முன்புபோல மார்க்கெட் இருக்காது என்பதால்தான் திருமணம் செய்வதில்லை.. சில நடிகைகள் திருமணம் செய்தாலும், கர்ப்பம் தரிப்பதை தவிர்ப்பார்கள். அழகு, உடல் கட்டுக்கோப்பு போய்விடும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்வதையும் தவிர்ப்பார்கள்.
விமானம் வைத்திருந்த நடிகை
இதற்கு கேஆர் விஜயாவை உதாரணமாக சொல்லலாம்.. வேலாயுதம் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார் கேஆர் விஜயா.. வேலாயுதம் அப்போதே சொந்தமாக விமானம் வைத்திருந்தார்.. தன்னுடைய கம்பெனிக்காக வைத்திருந்த விமானத்தை, கேஆர் விஜயா ஷூட்டிங் வந்து செல்ல பயன்படுத்தி கொண்டார். தமிழ்நாட்டில் சொந்தமாக பிளேன் வைத்திருந்த நடிகை கேஆர் விஜயாதான்.
முதன்முதலில் கற்பகம் படம் வந்தபோது, நாங்கள் கல்லூரியில் படித்து கொண்டிருந்தோம். அப்போது ஒவ்வொருவரும், தங்களுக்கு வரும் மனைவி , கேஆர் விஜயா போலதான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்..
கேஆர் விஜயா, பத்மினி
கற்பகம் படத்தில், கேஆர் விஜயாதான், அன்றைக்கு எங்களை போன்ற இளைஞர்களுக்கு "ஐடியல் பெண்" மிகவும் அழகியாக இருந்தார்.. ஒரே ஒரு குழந்தைதான் பிறந்தது.. அதற்கு பிறகு, உடல் பெருத்துவிட்டது.. அவரது பொலிவு, உடல்வாகு போய்விட்டது.
அதுபோலத்தான் நடிகை பத்மினியும், ஒரு குழந்தை பிறந்ததுமே உடல் பெருத்துவிட்டது.. அதனால்தான் பலரும் திருமணம் செய்ய தயங்குகிறார்கள்.. இப்போது வாடகை தாய் முறை வந்துவிட்டதால், கர்ப்பம் தரிக்கும் பிரச்சனையும் இல்லாமல் போய்விட்டது" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications