Serial Shooting: கொஞ்சம் சமூக இடைவெளியை கடைப்பிடிச்சிருக்கலாம்!
சென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த குஷ்பூ, சுஜாதா விஜயகுமார் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக நின்றுகொண்டு சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் செய்தியாளர்களை சந்தித்தனர்.
தொலைக்காட்சி சீரியல்கள் தயாரிப்பில் இருக்கும் குஷ்பூ, சுஜாதா விஜயகுமார் இருவரும், லாக்டவுனுக்குப் பிறகு ஷூட்டிங் நடத்த அனுமதி வேண்டும் என்று, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்தித்து கோரிக்கை வைத்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
அப்போது குஷ்பூ, சுஜாதா விஜயகுமார் இருவரும் நெருக்கமாக நின்று இருந்தனர். ஒருவரை ஒருவர் உரசியபடி நின்று சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செய்தியாளர்களை சந்தித்தனர்.

படப்பிடிப்பு அனுமதி
சின்னத்திரைக்கு சீரியல்கள் ஷூட்டிங் நடத்த, லாக் டவுனுக்குப் பிறகு அனுமதி அளிக்க வேண்டும் என்று நடிகை மற்றும் தயாரிப்பாளர் குஷ்பூ, சின்னத்திரை சீரியல் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் இருவரும் அமைச்சரை சந்தித்தனர். அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பின்னர் செய்தியாளர்களை இருவரும் சேர்ந்து சந்தித்தனர்.

தற்கொலைக்கு தூண்டுதல்
சுஜாதா விஜயகுமார் பேசுகையில், சீரியல் நடிகர்கள் ஷூட்டிங் இல்லாத நிலையில், வருவாய் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், சிலர் தனது வீட்டுக்கே வந்து, ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணம் வருகிறது என்று கூறியதாகவும் சொன்னார். இதானால், லாக்டவுன் முடிந்தவுடன் ஷூட்டிங் செய்ய அனுமதி கேட்டு வந்ததாகவும் கூறினார். இவரது தயாரிப்பில்தான் சன் டிவியில் கண்மணி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

40 பேரை வைத்து
லாக்டவுன் முடிந்த பிறகு ஷூட்டிங் செய்யலாம் என்று இப்போதே அனுமதி அளித்து, விதிமுறைகளை கூறினால்தான் நாங்கள் தயாராக இருக்க முடியும். ஒரு 40 பேரை வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்தலாம் என்று இப்படி கட்டுப்பாட்டுகள் விதித்து ஷூட்டிங் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறோம் என்று குஷ்பூ சொன்னார்.

குறைந்த பேர்
இன்று மாலை தமிழக அமைச்சரவையில் கலந்துக்கொண்டு அனுமதி அளிப்பது குறித்து தகவல் அளிப்பதாக அமைச்சர் கூறி இருக்கார் என்று குஷ்பூ சொன்னார். குறைந்த பேரை வைத்து ஷூட்டிங் நடத்தினாலும், சமூக இடைவெளி, முகத்தில் மாஸ்க் அணிந்துக்கொண்டு கவனமாக ஷூட்டிங் நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இல்லை என்றால், கொரோனா தொற்று அபாயம்தான் ஏற்படும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications